Skip to main content

வீட்டிற்குள் வந்த பாம்பு; பால் வைத்து வேண்டிக்கொண்ட பெண்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

A snake that entered the house; A woman praying with milk

 

வீட்டிற்குள் புகுந்த பாம்பிற்குப் பால் வைத்து வேண்டிக்கொண்ட பெண்ணின் செயல் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது மூங்கில்குடி எனும் கிராமம். இக்கிராமத்தில் சக்திவேல் லட்சுமி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இதை லட்சுமி கவனிக்காததால் தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். 

 

பாம்பினை பார்த்த லட்சுமியின் வளர்ப்பு நாய் ரோஸி குரைத்து சத்தம் எழுப்பியுள்ளது. இதனால் பாம்பு இருப்பதை லட்சுமி பார்த்து பாம்பினை விரட்டாமல் அதற்கு பால் வைத்து வேண்டியுள்ளார். இதன் பின்னும் பாம்பு அவ்விடத்தை விட்டு நகராததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாம்பினை அடித்துவிடாமல் உடனடியாக காட்டில் விட்டனர்.

 

பாம்பினைக் கண்டு பயப்படாமல் பாம்பிற்குப் பால் வைத்து வேண்டிக்கொண்ட செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீளப் பாம்பு!  

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
A 7-foot-long snake entered the house in Trichy

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் மேசை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சப்தம் கேட்டு ஹாலுக்கு வந்து பார்த்தபோது, மேசை மீது சுமார் 7 அடி நீளப் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. உடனே அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், கதவை சாத்தினார்.

அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டுக்குள் பாம்பை தேடிய போது எங்கோ பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையிலான வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்டனர். பின்னர் பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இதே போன்றதொரு பாம்பு வனத்துறையால் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
A nice snake that took a picture in a refrigerator near Cuddalore

கடலூர் அருகே செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன். இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் உடனடியாக பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் பாம்பு பிடி வீரர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உடனே வந்தார். அப்போது வீட்டில் எங்கு தேடியும் பாம்பு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழே குச்சியை விட்டுத் தட்டியபோது, திடீரென குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் பாம்பு ஏறி படம் எடுத்தது. இதனைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே பாம்பைப் பிடிக்க பத்து நிமிடம் போராடி, பாம்பு பிடி வீரர் பாம்பைப் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தார். பாம்பு படம் எடுத்து ஆடியபோது, அங்கிருந்தவர்கள் சூடம் ஏத்தி வழிபட்டனர். பாம்பு குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போராடி பாம்பைப் பிடித்த பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்