Skip to main content

ஆம்புலன்ஸில், பள்ளி வேனில் மணல் கடத்தல்! இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
sand


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித விதமாக மணல் கடத்தல் நடப்பதைக் கண்டு காக்கிகளே மண்டையை சொறிந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு பல்வேறு விதமான முறையில் மணல் கடத்தலை செய்து வருகின்றனர் மணல் கடத்தல்காரர்கள். ஆரம்பத்தில் லாரிகள் மூலம் கடத்தினர், அது சற்று குறைந்து அ.தி.மு.க பெரும்புள்ளிகள் மட்டுமே செய்து வருகின்றனர்.

 

 

லாரிகளை தொடர்ந்து டிராக்டர், மாட்டு வண்டி, டாட்டா ஏஸ் உள்ளிட்ட வண்டிகளில் மணல் கடத்தலை செய்தனர். அதன் பிறகு இரண்டு சக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையாக கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது காவல் துறைக்கு தெரிந்தும், தெரியாமலும் கனகச்சிதமாக நடந்து வருகிறது.
 

 

sand


இந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து மணல் தேவைக்கு வரும் நாட்களில் தட்டுப்பாடு அதிகமாகி விடும் என்பதால் ஆறுகள், குளங்கள், ஏரிகளில் இரண்டு நாட்களாக மணல் கொள்ளை நடக்கிறது. நேற்றைய தினம் கும்பகோணம் பகுதியில் சொகுசு காரில் மணல் கடத்துவது காக்கிகளுக்கு தெரிந்து பிடித்தனர், அதே நாள் மதியம் ஜீப் மூலம் மணல்கடத்துவதை பிடித்தனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு மயிலாடுதுறை மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததை பொதுமக்கள் பார்த்து விட்டு முகத்தில் விரல் வைத்தனர்.
 

sand


இப்படிபட்ட நிலையில், தண்ணீர் வருகையால் ஆறுகளில் அபாய எச்சரிக்கை பலகை வைத்து வருகின்றனர். அப்படி வந்தபோது கும்பகோணம் அருகே உள்ள குடமுருட்டி. ஆற்றில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு பள்ளிக்கூட வேண் கரையேறிதை கண்டு வளைத்து பிடித்தனர். அதில் சாக்கு மூட்டையில் மணல் கட்டி அடுக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வேனில் 150 மூட்டை மணல் இருந்துள்ளது. வேனையும், மணல் மூட்டையைும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.

நாடு இந்த மாதிரி ஆகிடுச்சே, திருடுவதற்கு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என சமுக ஆர்வலர்கள் கவலை அடைகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.