Skip to main content

கடத்தப்படும் 'பாலிகீட்ஸ்'... அழியும் கடல் வளம்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

பாலிகீட்ஸ் கிலோ ரூ.3000 என்பதால், பணத்திற்கு ஆசைப்பட்டு விபரீதம் தெரியாமல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரமாகவும், கடலரிப்பை தடுக்கும் அலையாத்திக் காடுகளின் பாதுகாவலனாகவும் விளங்கி வரும் அதிசய உயிரினமான "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை சதுப்பு நிலத்தில் தோண்டி எடுத்து சென்னைக்கு கடத்த முயன்ற 8 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 smuggling polykheds destroy marine resources

'பாலிகீட்ஸ்' கடற்கரைப் பகுதியில் கடலரிப்பை காக்கும் சதுப்பு நிலப்பகுதியிலுள்ள மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகளின் ஆதாரம் இந்த "பாலிகீட்ஸ்" எனப்படும் மண்புழுக்களே.!! இவ்வகை அலையாத்திக்காடுகள், மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தியில் அதிகம். இத்தகைய காடுகளில் வாழ்ந்து வரும் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் மண்ணை சீர்ப்படுத்தி ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்கிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். அதுபோக "பாலிகீட்ஸ்" இருக்குமிடத்தில் இறால் மற்றும் மீன்கள் வளம் நிறைந்தே காணப்படும்.

இயற்கையான உணவாய், மிகுந்த வளர்ச்சியைத் தரும் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் பண்ணையிலுள்ள வளர்ப்பு இறாலின் வளர்ச்சிக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டு மிகுந்த அளவில் கடத்தப்பட்டு வருகின்றது. இதேவேளையில், மண்புழுக்கள் தோண்டி எடுத்து கடத்தப்பட்டால் ஈரத்தன்மை இல்லாமல் அலையாத்திக் காடுகள் உள்ள இடம் கடினமாகி இதனால் கடலரிப்பு எளிதில் நடக்கும் என்பதால் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் வேட்டையாடுதலை வனத்துறை தடைச்செய்துள்ளது. எனினும், ஆங்காங்கே கடத்தல் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது இல்லை.

 smuggling polykheds destroy marine resources

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வளையர்வாடி பகுதியில் இருந்து "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை சென்னைக்கு கடத்தி செல்வதாக வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வளையர்வாடி பகுதியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டி பெட்டியாக 5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை கைப்பற்றி, கடத்தலில் ஈடுப்பட்ட கடலூரை சேர்ந்த பெருமாள், செங்கேணி, விஜய், ராயர், சுப்பிரமணியன், சந்திரன், கோபி மற்றும் கார்த்திக்கேயன் உள்ளிட்ட எட்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது வனத்துறை. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.