Skip to main content

கடத்தப்படும் 'பாலிகீட்ஸ்'... அழியும் கடல் வளம்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

பாலிகீட்ஸ் கிலோ ரூ.3000 என்பதால், பணத்திற்கு ஆசைப்பட்டு விபரீதம் தெரியாமல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரமாகவும், கடலரிப்பை தடுக்கும் அலையாத்திக் காடுகளின் பாதுகாவலனாகவும் விளங்கி வரும் அதிசய உயிரினமான "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை சதுப்பு நிலத்தில் தோண்டி எடுத்து சென்னைக்கு கடத்த முயன்ற 8 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 smuggling polykheds destroy marine resources

'பாலிகீட்ஸ்' கடற்கரைப் பகுதியில் கடலரிப்பை காக்கும் சதுப்பு நிலப்பகுதியிலுள்ள மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகளின் ஆதாரம் இந்த "பாலிகீட்ஸ்" எனப்படும் மண்புழுக்களே.!! இவ்வகை அலையாத்திக்காடுகள், மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தியில் அதிகம். இத்தகைய காடுகளில் வாழ்ந்து வரும் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் மண்ணை சீர்ப்படுத்தி ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்கிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். அதுபோக "பாலிகீட்ஸ்" இருக்குமிடத்தில் இறால் மற்றும் மீன்கள் வளம் நிறைந்தே காணப்படும்.

இயற்கையான உணவாய், மிகுந்த வளர்ச்சியைத் தரும் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் பண்ணையிலுள்ள வளர்ப்பு இறாலின் வளர்ச்சிக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டு மிகுந்த அளவில் கடத்தப்பட்டு வருகின்றது. இதேவேளையில், மண்புழுக்கள் தோண்டி எடுத்து கடத்தப்பட்டால் ஈரத்தன்மை இல்லாமல் அலையாத்திக் காடுகள் உள்ள இடம் கடினமாகி இதனால் கடலரிப்பு எளிதில் நடக்கும் என்பதால் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் வேட்டையாடுதலை வனத்துறை தடைச்செய்துள்ளது. எனினும், ஆங்காங்கே கடத்தல் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது இல்லை.

 smuggling polykheds destroy marine resources

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வளையர்வாடி பகுதியில் இருந்து "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை சென்னைக்கு கடத்தி செல்வதாக வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வளையர்வாடி பகுதியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டி பெட்டியாக 5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை கைப்பற்றி, கடத்தலில் ஈடுப்பட்ட கடலூரை சேர்ந்த பெருமாள், செங்கேணி, விஜய், ராயர், சுப்பிரமணியன், சந்திரன், கோபி மற்றும் கார்த்திக்கேயன் உள்ளிட்ட எட்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது வனத்துறை. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.