Skip to main content

ஆண்மைக்கு கடல் வெள்ளரி... கடத்தியது தப்பா..? சாபத்தை வாங்காதீங்க சார்..!

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

கடந்த 2001 ஜுலை 11ம் தேதியன்றே கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்தாலும் ஆண்மைக்கு உகந்தது என்பதால் கடல் அட்டைக்கான தேவை இன்று வரை இருப்பதால் அதற்காக கடத்தலும் தொடர்கின்றது. அந்த வகையில், இலங்கைக்கு கடத்த இருந்த 3 டன் கடல் அட்டைகளுடன் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்துள்ளனர் ராமேஸ்வரம் வனத்துறைத்துறையினர்.

 

smuggling incident in ramanathapuram

 

ஆண்மையை அதிகரிக்கவல்லது என சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள மக்களுக்கு கடல் அட்டை வரப்பிரசாதமான ஒன்று. வழுவழுப்பான தோலை உடையதும், நீண்ட உருளை வடிவில் வெள்ளரி போன்றும் இருக்கும் கடல் அட்டை  முட்தோலி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினமே. கடலின் ஆழப்பகுதியில் வாழும் இக்கடல் அட்டையை வேட்டையாடுவதெற்கென மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டு. தங்கம் கடத்தலுக்கு இணையாக தடைவிதிக்கப்பட்ட இந்த கடல் அட்டையை கடத்துவோர் இங்கு அதிகம் என்பதால் வனத்துறையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கடத்தலை தடுப்பதும் வாடிக்கையான ஒன்று.

 

smuggling incident in ramanathapuram

 

இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல்  பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக  இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷிற்கு  கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே கடலில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டு படகை சோதனை செய்ய முயன்ற போது, இருவர் படகில் இருந்து கடலில் குதித்து தப்பிக்க முயற்சித்தனர். தப்பிய வேதாளை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும்  மடக்கி பிடித்த வனத்துறையினர் நாட்டு படகை சோதனையிட, படகில்  261 மூடைகளில் 3,200 கிலோ  எடை கொண்ட பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல்கார்களுடன் கடல் அட்டைகளையும் அட்டைகளையும் கைப்பற்றியவர்கள், நாட்டுபடகையும் பறிமுதல் செய்து மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் படகின் மதிப்பு 40 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது. அதே வேளையில், ஆண்மைக்கு பயன்படும் மருந்தான கடல் அட்டையை கடத்தியது தப்பா..? சாபத்தை வாங்காதீங்க சார்.! என கடத்தல்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.