Skip to main content

காதலனை நம்பி வந்த சிறுமி...தவறாக அணுகிய ஆண்கள்...திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

திருப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தனியாக நிற்பதை பார்த்து அவரை அழகி என நினைத்து தவறாக அணுகி பின்பு போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி சில மாதங்களுக்கு முன்பு இரயிலில் மதுரை வந்துள்ளார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்ற இளைஞர் அந்த பெண்ணுடன் பேசி செல் போன் நம்பர் வாங்கியுள்ளார்.பிறகு அந்த இளைஞருடன் அந்த பெண் செல் போனில் அடிக்கடி பேசியுள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இந்த விஷயம் அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அந்த பெண்ணை கண்டித்துள்ளனர். 

 

incident



சிறுமியின் பெற்றோர்க்கு விசயம் தெரிந்ததை அறிந்த சையது இப்ராகிம் அந்த சிறுமியை திண்டுக்கல் வருமாறு அழைத்துள்ளார். சையது இப்ராஹிம் கூறியதை நம்பி அந்த சிறுமியும் திண்டுக்கல் வந்துள்ளார். பின்பு அந்த சிறுமியை ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளான். பின்பு திருப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளான். மீண்டும் இவர்கள் காதலிப்பதை அறிந்த பெற்றோர்கள் சிறுமியை கண்டித்து அவர் வைத்திருந்த செல் போனை வாங்கி வைத்துள்ளனர். வீட்டில் கண்டித்ததை காதலுடன் சொல்லி கதறி அழுத்த அந்த சிறுமி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். உடனே அந்த காதலன் சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்துள்ளார். பிறகு வீட்டில் சம்மதம் வாங்கி வருகிறேன் என்று கூறி அந்த சிறுமியை பஸ் ஸ்டாண்டில் நிற்க வைத்து விட்டு சென்றுவிட்டான். வெகு நேரமாகியும் சையது இப்ராஹிம் வரவில்லை.   


மேலும் நள்ளிரவு என்பதால் தனியாக நின்ற சிறுமியை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் அந்த சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். இதனால் கதறி அழுத சிறுமி தான் காதலனால் ஏமாற்றப்பட்டு நிற்பதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த இளைஞர்கள் அந்த சிறுமியை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிறுமியை அழைத்து வந்த இளைஞரின் செல்போனை வைத்து அவர் யார் என்ற விவரத்தை சேகரிக்கின்றனர். அந்த இளைஞர் சீக்கிரம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.