Skip to main content

3 பேரின் உயிரை பறித்த சிறிய கவனக்குறைவு... வாடகை வீடு ஷிப்டிங் பொழுது நிகழ்ந்த சோகம்!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

The small carelessness that separated the lives of 3 people... Tragedy happened while shifting the rented house!

 

வீட்டிலிருந்த பொருட்களை மற்றொரு வீட்டுக்கு மாற்றும்போது ஏற்பட்ட மிகச்சிறிய கவனக்குறைவு மூன்று பேரின் உயிரையே பலி கொண்டுள்ளது. அப்படிப்பட்ட சோக சம்பவம் ஒன்று தர்மபுரி அருகே நடந்துள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டை ரோட்டில் பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருந்தது. வீட்டின் இரண்டாவது மாடியில் இலியாஸ் என்ற நபர் குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டு உரிமையாளரான பச்சையப்பனின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் வாடகைக்கு இருக்கும் இலியாசை வேறு வீட்டிற்கு செல்ல வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இலியாஸ் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கோல்டன் தெருவில் உள்ள வேறு ஒரு வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

 

வீட்டிலிருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இதற்காக எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்களை வேறு வீட்டிற்கு மாற்றும் பணியில் இலியாஸ் ஈடுபட்டிருந்தபோது அதற்காக உதவும் நோக்கில் வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், கோபி, குமார் ஆகியோர் உதவி புரிந்துள்ளனர். பேக் செய்யப்பட்ட சிறிய பொருட்களை வண்டியில் ஏற்றியவுடன் பெரிய பொருட்களான பீரோ உள்ளிட்டவற்றை இரண்டாவது மாடியில் மேல்மாடத்திலிருந்து கயிறு மூலம் கட்டி கீழே இறக்க நால்வரும் திட்டமிட்டனர். திட்டமிட்டபடி பீரோவை இறக்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டிற்கு வெளியே உயர் மின்னழுத்த கம்பியில் பீரோ பட்டதால் மின்சாரம் தாக்கியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் இலியாஸ், கோபி, பச்சையப்பன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கவலைக்கிடமான நிலையில் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கவனக்குறைவால் ஏற்பட்ட மூன்று பேரின் உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.