Skip to main content

பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான கோஷம்! -சென்னையில் நந்தினி குடும்பத்தினர் கைது! 

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
nann

 

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!’ இந்த கிராமத்து சொலவடை,  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையின் சமீபத்திய செயல்பாட்டுக்கு மிகவும் பொருந்திப் போகிறது. விமான பயணத்தின்போது,  பா.ஜ.க.வுக்கு எதிரான சோபியாவின் முழக்கத்தை, ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக்கிவிட்டார். 


இதோ இன்னொரு பெண் கிளம்பியிருக்கிறார். அவர், வேறு யாருமல்ல! மதுவுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்திவரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினிதான்!


‘சோபியா விமானத்தில்தானே கோஷம் போட்டார். நான் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திலேயே கோஷம் போடுகிறேன்’  என்னும் உந்துதலோடு, தன்னுடைய தந்தை ஆனந்தன் மற்றும் சகோதரி நிரஞ்சனா ஆகியோருடன் கமலாலயம் நோக்கிச் சென்றார். அப்போது,  ‘சர்வாதிகார BJP ஒழிக!’ என்றும், ‘பாசிச BJP ஒழிக!’ என்றும்,  ‘டெல்லியில் மோடி வீட்டின் முன்பு போராடியதற்காக கொலை மிரட்டல் விடுத்து மிக இழிவான தனிமனித தாக்குதலில் ஈடுபடும் பார‘தீய’ ஜனதா கட்சியைக் கண்டித்துப் போராட்டம்’ என்றும் இவர்களின் கையில் பதாகைகள் இருந்தன. இவர்களை பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் செல்லவிடாமல், வழியிலேயே தி.நகர் போலீசார் கைது செய்தனர். 


தமிழகத்திலும் பா.ஜ.க.வுக்கு எதிரான அலை மிக வேகமாகவே வீசுகிறது!


 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுவுக்கு எதிராக போராடிய நந்தினிக்கு திருமணம்!!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

மதுவுக்கு எதிராக போராடிவரும் வழக்கறிஞர் நந்தினிக்கு குணா என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது.

தனது தந்தை ஆனந்த் துணையுடன் மதுவிலக்கிற்காக தனியாக போராடி வருபவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. மதுவிலக்கு போராட்டம் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 

Nandini was married


கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடந்த மது எதிர்ப்பு போராட்டத்தில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நந்தினி மற்றும் ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக திருப்பத்தூர் கோர்ட்டுக்கு வந்த தந்தை-மகள் மீது கோர்ட்டு அவமதிப்பு புகாரும் கூறப்பட்டது. இந்த புகாரில் கைது செய்யப்பட்ட 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவே நந்தினியின் திருமணத்துக்கு தடையாக அமைந்தாலும், இன்னொரு தேதியில் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று நந்தினி உறுதிபட தெரிவித்தார்.

இந்த நிலையில் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் நேற்று திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கோர்ட்டு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து நந்தினி மற்றும் ஆனந்தன் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் அவருக்கும் அவரது காதலருக்கும் திருமணம் நடந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

Nandini was married


இன்று (10.07.19-புதன்கிழமை) மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தினி ஆனந்தன் குடும்பத்தின் குலதெய்வ கோவிலில்  திருமணம் எளிமையான முறையில்  நடைபெற்றது. 9ம்தேதி சிறையிலிருந்து வெளியே வந்த நந்தினிக்கும் குணாவுக்கும் இன்று (10.07.19-புதன்கிழமை) மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து நந்தினி கூறியதாவது "எங்களது திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்துவரும் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நேற்று இரவு சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டோம். ஏற்கனவே எங்களது திருமணத்தை நிறுத்திய இந்த அரசு மேலும் ஏதாவது தொல்லை கொடுக்கும். எல்லாவற்றையும் இனி என் கணவரோடு சேர்ந்து எங்கள் குடும்பம் மக்களுக்கு எதிராக எதை கொண்டுவந்தாலும் அதை துணிவோடு எதிர்போம். எங்கள் குடும்பம் போல் மக்களும் உண்மைக்கு குரல் கொடுக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மதுவுக்கு எதிரான போராட்ட்டம் இனி மிக தீவிரமாக சேர்ந்து எதிர்ப்போம் என்றார்.

 

 

Next Story

5ம் தேதி திருமணம், ஆனால் இருப்பது சிறையில்!!! மது ஒழிப்பு போராளியின் நிலை...

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

மதுஒழிப்பை முன்னெடுத்து தொடர்ந்து போராடி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. பல மதுஒழிப்பு போராட்டங்களை நடத்தி சிறை சென்றார்.
 

nandhini


கடந்த 2014ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. 

அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார். இதனால் அவர்மீதும், அவரது தந்தைமீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவருக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதும், ஜூலை 9ம் தேதி வரை அவர்களை சிறையிலடைக்க திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் உட்பட அனைவரும் அதிர்ச்சியிலுள்ளனர்.