Skip to main content

தஞ்சை அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருத்த 50 பேர் மீட்பு

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

செங்கல் சூளைகள் மற்றும் தொழில் கூடங்களில் கொத்தடிமைகள் அதிகம் உள்ளனர். அதேபோல ஆடு மேய்க்கவும் சிறுவர்களை கொத்தடிமையாக வாங்கிச் சென்று வேலை வாங்குகிறார்கள். 

 

news


தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் உள்ள தேவன்குடியில் சேகர் என்பவரின் செங்கல்சூளையில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 24 பேரும், ராஜூ என்பவரின் செங்கல் சூளையில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 18 பேரும், மணி என்பவரின் செங்கல் சூளையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 50 பேர் கொத்தடிமைகளாக பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். 
 

இவர்கள் குறித்து இன்டர்நேஷனல் ஜூடியல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமிக்கு கொடுத்த தகவலின் பேரில் வியாழக்கிழமை காலை தேவன்குடிக்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி, பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் 50 பேரையும் அதிரடியாக மீட்டனர். 
 

மீட்கப்பட்டவர்கள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். உரிய விசாரணைக்கு பின்னர் அவர்களை வருவாய்த் துறையினர் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து அரியலூர் மாவட்டம் அருங்கால் பாப்பாங்குளத்தைச் சேர்ந்த சுமதி (30), கூறியதாவது: செங்கல்சூளையில் சித்திரவதையைத் தான் அனுபவித்தோம். என் கணவரின் சர்க்கரை நோய்க்கு சிகிச்சைப் பெறக்கூட அனுமதிக்கவில்லை. நாங்கள் வாங்கியது 50 ஆயிரம் ரூபாய் தான். பத்திரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள்வார்கள். என் தம்பி திருமணத்துக்குக்கூட  போக முடியவில்லை. நல்லது கெட்டதுக்கு கூட போக முடியாது. மிரட்டுவார்கள் என்றார். 
 

இதுகுறித்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி கூறியதாவது: செங்கல் சூளையில் ஒரு வருடத்திலிருந்து பதினைந்து வருடம் வேலைப் பார்த்தவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் செங்கல் சூளை நடத்துபவர்களிடம் முன்பணமாக பல ஆயிரம் பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மற்றும் அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். செங்கல் சூளை உரிமையாளர்களிடம் பத்திரம் எழுதி கடன் வாங்கிய யாருக்குமே கடன் அடையவில்லை.  
 

அப்பா வாங்கிய கடனுக்கு மகனும், மருமகளும் வேலைப் பார்த்து வருகின்றனர். செங்கல் உடைஞ்சா காசு கிடையாது. மழை பெய்ஞ்சு செங்கல் கரைஞ்சா காசு கிடையாது. ஒரு கல்லு அறுத்தா 50 காசு தான். வார சம்பளம் ஆயிரம் ரூபாய் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
 

இதுதொடர்பாக கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சேகர், ராஜூ, மணி ஆகியோர் மூவரையும் தேடி வருகிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடுங்கவைக்கும் அவலக் குரல்! எழுதவும் கூசும் கொடுமைகள்! - வதைக்கப்பட்ட குடும்பம் மீட்கப்பட்டது எப்படி?

உலகம் முழுவதும், பொருளாதார ரீதியிலும், இனம் மற்றும் சாதியின் பெயராலும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை நிலக்கிழார்களும் பெருமுதலாளிகளும் கொத்தடிமைகளாக வைத்து வதைத்த நிகழ்வுகளை வரலாறு நெடுக பார்க்க முடியும். இந்தியாவிலும் இத்தகை கொத்தடிமை கொடுமைகளுக்குக் குறைவே இல்லை. 1976ஆம் ஆண்டு கொத்தடிமைத் த...
Read Full Article / மேலும் படிக்க,
Open in app

Next Story

ஆந்திரா கல்குவாரியில் தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பலி!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பல கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல் குவாரிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனர். அதில் பலர் அடிமையாக உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. சொற்ப ஊதியத்தில் அங்கு அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். உயிருக்கு பாதுகாப்பற்ற பணியில் உள்ளனர். 

 

incident in Andhra Pradesh

 

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய ஆந்திரா சட்டசபையின் எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் உள்ள சாந்திபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சோமாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஆர்ஆர் கல்குவாரியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தர்மபுரி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக அந்த கல்குவாரியில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அருகாமையில் பாறைகளை உடைத்து தள்ளிக்கொண்டு இருந்த ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி உள்ளார்.

incident in Andhra Pradesh


சக ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சண்முகம் இயந்திரத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கேயே உயிரிழந்தார். இதுப்பற்றிய தகவல் குப்பம் போலிஸாருக்கு சொல்லப்பட அவர்கள் சம்பவயிடத்துக்கு வந்த சண்முகம் உடலை கைப்பற்றி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.