Skip to main content

தோப்பில் வேலை பார்த்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு- கடன் ரத்து செய்த இளம்பகவத்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமம், முத்து மாரியம்மன் கோவில் தெரு இருளர் காலனியைச் சேர்ந்தவர்கள் சண்முகம் - அங்கம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் பாளையம். 

 

 

இவர்கள் உளியம்பாக்கம் அடுத்த காரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பு ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 24ந்தேதி காலை அந்த கிராமத்துக்கு நேரடியாக அதிகாரிகளுடன் சென்றார். சம்மந்தப்பட்ட சவுக்கு தோப்பில் சென்று ஆய்வு செய்தபோது, சண்முகம் - அங்கம்மாள் குடும்பம் அங்கு வசிப்பது தெரியவந்தது. 

 

slave worker

 

அவர்களிடம், இது யார் நிலம், நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் என விசாரித்தவரிடம், இந்த நிலத்தின் உரிமையாளர் ஜெயலலிதா என்பவரிடம் 100000 ரூபாய் கடன் வாங்கினோம். கடனுக்காக எங்களை அழைத்து வந்து அவர்கள் நிலத்தில் வேலை வாங்கிக்கொண்டு உள்ளார்கள். நாங்கள் பதினோரு ஆண்டுகளாக இங்கு வேலை பார்த்து வருகிறோம் என்றனர். மேலும், கடன், வட்டியென ரூபாய் 2,70,000/- செலுத்தினால் தான் தங்களை வீட்டுக்கு அனுப்புவோம் எனச்சொல்லியுள்ளார்கள் என்றனர். 

 

slave worker

 

இவர்களை வேலை வாங்கியதோடு, முழுமையாக ஊதியம் தராமல் பெற்ற கடனுக்கான வட்டியென பணத்தை பிடித்துக்கொண்டு சொற்ப ஊதியம் தந்து வேலை வாங்கியதும், ஒரு நபருக்கான குறைந்தபட்ச கூலிக்கும் குறைவாக ஊதியம் அளித்து வந்ததும் தெரியவந்தது. அதோடு, அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பாமல் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது தெரியவந்தது. 

 

 

இதற்கான விசாரணை முடிவில் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் மேற்கண்ட குடும்பத்தினர் கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்டு அவர்களது கடன் தொகையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளார். அதோடு, கொத்தடிமைகளுக்கான அரசு நஷ்டயீடு தந்து அவர்களது வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். 

 

கொத்தடியைமாக வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றார் என்கிறார்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Kathir Anand filed nomination

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேள தளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.