Skip to main content

'விஜயகாந்த் குறித்து அவதூறு...'-யூடியூப் சேனல்கள் மீது பார்த்தசாரதி புகார்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

 'Slander about Vijaykanth ...' - Parthasarathy complains on YouTube channels!

 

தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான செய்திகளைப் பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 21/06/2022 அன்று மாலை தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்' என கூறப்பட்டிருந்தது. விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என பல பிரபலங்களும் தங்களது விருப்பங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் சில யூடியூப் சேனல்களில்  விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் வெளியாகி இருந்தன.

 

 'Slander about Vijaykanth ...' - Parthasarathy complains on YouTube channels!

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி பேசுகையில், ''டிடி இன்ஃபோ  என்ற யூடியூப் சேனலும், ஆர்ஆர் நியூஸ் என்ற யூடியூப் சேனலும் விஜயகாந்த் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் எதிரொலித்து, தேமுதிக தொண்டர்கள் என்னிடத்திலும், தலைமை கழக நிர்வாகிகளையும் கைபேசியில் தொடர்பு கொண்டு 'என்ன ஆச்சு என்ன ஆச்சு' என்று கேட்டுக்கொண்டார்கள். அவர்களை எல்லாம் நாங்கள் சமாதானப்படுத்தி, அமைதிப்படுத்தி அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னோம். நேற்று இரவு விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். தவறான செய்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.