பழனியில் வீடுகளின் முன் மண்டை ஓடுகளை வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தேவாங்கர் தெருவிலுள்ள வீடுகள் முன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, மனித மண்டை ஓடுகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் யார் இந்த செயலில் ஈடுபட்டது எதற்காக என குழப்பத்தில் உள்ளனர். அந்த தெருவில் உள்ள பாக்கியம், மணி, உள்ளிட்டோரின் வீடுகளிலும் ரேஷன் கடை முன்பும் எலும்புக்கூடுகளை வைத்தது யாரென விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீடுகளின் முன் மனித மண்டை ஓடுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் சற்று அச்சத்தை உருவாகியுள்ளது.