அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் ஆறு வேலை நாட்கள்! -சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

high court chennai

சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களைக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால், பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும், சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement chennai high court working day
இதையும் படியுங்கள்
Subscribe