இந்த நிலையில், இறந்து போன முருகானந்தம் உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். அவர்களில் சிலர் சவப்பெட்டியை சுற்றிலும் நின்று கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர். அப்போது சவப்பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை யாரும் எதிர்பாராத நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் கனகவல்லி, ராஜாம்பாள், லலிதா, கௌரி, மகேஸ்வரி, கருப்பாயி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் சவப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.