style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த 25ம் தேதி காலை வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது மகனின் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திசையன்விளை போன்ற இடங்களில் அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தி வந்தனர்.
6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் தொடர்புடைய வங்கி லாக்கர்கள் மற்றும் 30 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் இன்று முடக்கம் செய்துள்ளனர் என்ற தகவல் வந்ததை அடுத்து விவி மினரல் நிறுவனத்திற்கு ரூபாய் 1800 கோடிமுதல் 2500 கோடி வரைகணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,800 கோடி ரூபாய் வரிஎய்ப்பு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள வருமானவரித்துறை 8 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.