சிவசங்கர் பாபா விவகாரம்- புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

sivashankar baba issues cbcid police announcement

பாலியல் புகாரில் சிக்கி கைதான சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார். மேலும், சிவசங்கர் பாபாவை ஜூலை 1- ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், "சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் தர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணை அதிகாரி குணவர்மன்- 98405- 58992, ஆய்வாளர்- 98406- 69982 என்ற எண்களில் புகாரளிக்கலாம். inspocu2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மாணவிகள் புகாரளிக்கலாம். புகார் தருவோரின் விவரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு பாதுகாப்பும் அளிக்கப்படும்" என சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

CBCID police Sivasankar
இதையும் படியுங்கள்
Subscribe