Skip to main content

'பினாமி' பெயரில் சிவசங்கரன் ரூ.300 கோடி முதலீடா? அமலாக்கத் துறை விசாரணை!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

Is Sivasankaran investing Rs 300 crore in the name of Benami? Enforcement Department Investigation


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தூதரகத்தின் டிப்ளோமேட் பேக் மூலம் கேரளாவுக்குத் தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரம் அட்டன்குளம் கரை மகளிர் சிறையில் உள்ளார். ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தலுக்கு முதுகெலும்பாக இருந்த முதன்மைச் செயலாளரும் தகவல் தொழிட்நுட்பச் செயலாளருமான சிவசங்கரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யபட்டு (நீதிமன்ற அனுமதியுடன்) அவர்களின் கஸ்டடியில் உள்ளார்.


இந்தநிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சிவசங்கரன் 300 கோடி ரூபாய்க்கு மேல் 'பினாமி' பெயரில் முதலீடு செய்திருப்பதை ஒப்புக்கொண்டதாக, அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


அதில், கேரள மின்சாரத்துறை தலைவராக இருக்கும்போது காற்றாலைகள் மூலம் மின்சாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெறபட்டது. அதில், 'ஜொ்மனி ஆல்லைட் சைன்' நிறுவனத்துடன் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டு, அந்த நிறுவனம் கன்னியாகுமரி அருகே ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டம் பழவூா், பணகுடி ஆகிய இடங்களில் காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளார். மேலும் அந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் இருக்கும் 4 நாடுகளில் ஹோட்டல், சுற்றுலா நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.


அதேபோல், கேரளாவில் சுற்றுலா மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கன்.ஃபா்மடு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கரனால் இந்தளவு கோடிகளை முதலீடு செய்ய முடிந்தது என்றால் அவா் துறை ரீதியாக எவ்வளவு ஊழல் செய்திருப்பார் என்ற கேள்வி அமலாக்கத் துறையில் எழுந்துள்ளது. அந்த வகையில் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் முதல் கட்டமாக அமலாக்கத் துறையினா் குமரி, நெல்லை மாவட்டங்களில் காற்றாலையில் முதலீடு செய்திருப்பது தொடா்பாக விசாரணை நடத்த 4 -ஆம் தேதி வரவுள்ளனா். அதனைத் தொடா்ந்து கேரளா மற்றும் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடு சம்மந்தமாகவும் விசாரணை நடத்த உள்ளனா். இதற்கிடையில் சிவசங்கரனின் ஒரே மகனையும், அவரது மனைவி டாக்டா் கீதாவையும் விசாரிக்க உள்ளனா். இந்த நிலையில் சிவசங்கரனின் முதலீடு நிதி குறித்து கேரள தலைமைச் செயலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.