Skip to main content

பினராயி விஜயனின் மாஜி முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் கைதாகிறாரா?

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Is Sivasankaran, former principal secretary of Pinarayi Vijayan, arrested?

 

கேரளத்தில் இருந்து வளைகுடா நாடு வரை பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சம்பவம், ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தல் விவகாரம். இந்த விவகாரத்தின் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டவர் கேரளா முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன். இவர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறையின் வளையத்தில் இருக்கும் சிவசங்கரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கின்றனர் சுங்கத்துறை வட்டாரங்கள்.


ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தலுக்கு வசதியாக, சிவசங்கரன் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருந்ததாகவும், ஸ்வப்னா சுரேஷின் லாக்கரில் ரூ.1 கோடி இருப்பதாகவும் விசாரணையில் சிவசங்கரன் உறுதிப் படுத்தியுள்ளார். மேலும், அவரிடமிருந்து இன்னும் பல்வேறு தகவல்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதால், அவரை விசாரணைக்கு மீண்டும் வருமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அந்த விசாரணையின் முடிவில் சிவசங்கரன் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது.


இதைத் தொடர்ந்து எர்ணாகுளம் ஐகோர்ட்டில் முன்ஜாமின் தாக்கல் செய்தார் சிவசங்கரன். இதில், அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, ஐகோர்ட் 23 -ஆம் தேதி வரை சிவசங்கரனை கைது செய்யத் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் திடீரென்று நெஞ்சு வலி இருப்பதாகக் கூறி, தனது மனைவி மருத்துவராகப் பணி புரியும் திருவனந்தபுரம் கிள்ளிபாலத்தில் உள்ள பி.ஆர்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு இதயக் கோளாறு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

 

Ad

 

இதற்கிடையில் முதுகுத் தண்டுவடத்தில், சிறு பிரச்சனை இருப்பதாக அந்த மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவா் அனுமதிக்கபட்டிருக்கும் அறையைச் சுற்றி போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் சுங்கத்துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். இதனால் அவர் கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் பினராயி விஜயனுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி உடனே பதவி விலக வேண்டுமென்று போராடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.