Advertisment

 சிவபெருமானுக்கு யாகம் வளர்த்தால் மழை பொழியுமா; தமிழக அரசை கலாய்த்த பாலகிருஷ்ணன்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தையோ, ஓ,என்,ஜி,சி நிறுவனங்களையோ டெல்டா மாவட்டங்களின் உள்ளே நுழையவிடமாட்டோம் என்றார் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் .

Advertisment

b

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, ஸ்டெர்லைட் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும் போராட்டம் வெடிக்கத் துவங்கியுள்ளது.

Advertisment

இந்தநிலையில் நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், " ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் ஜூன் 5ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பேரணி நடைபெறும் நீர்நிலைகளை பராமரிக்காமல் ஏரி குளங்களைத் தூர் வாராமல் சிவபெருமானுக்கு யாகம் வளர்த்தால் மழை பொழியுமா? ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களை டெல்டா மாவட்டங்களில் அனுமதிக்க மாட்டோம் , மீறி செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் வெடிக்கும்." என்று எச்சரித்தார்.

cpm nagai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe