Advertisment

சிவகாசியில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி... 2 பேர் கவலைக்கிடம்...

சிவகாசி சுப்பிரமணியபுரம் அருகே பட்டாசு தொழிலாளர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 3 பேர் பலி.

Advertisment

sivakasi

சிவகாசியிலுள்ள சல்வார்பட்டியை சேர்ந்த பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் பதினான்கு பேர் வேன் ஒன்றில் வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது காயில்பட்டியில் ஒரு வளைவில் வளையும்போது வேன் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே மூன்று பலியாகியுள்ளனர். மீதம் உள்ள 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 11 பேரையும் அருகிலுள்ள சாத்தனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

உயிரிழந்த மூன்று பேரில் ஒருவர் பெண். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகாயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Sivakasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe