Skip to main content

ஒன்லி ஸ்ப்ளண்டர்..எத்திக்ஸ் பேசிய டூவீலர் திருடன்..!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

    " மத்த வண்டின்னா வேலை வைக்கும்..! இதுல அப்படி கிடையாதுல்ல.. டிமாண்டும் இருக்கு.. அதனால் தான் ஸ்ப்ளண்டர் வண்டியாக கை வைச்சு தூக்கினேன்." என காவல்துறையிடம் எத்திக்ஸ் பேசியுள்ளான் மூன்று மாவட்டப் போலீசாருக்கும் "தண்ணீக்" காட்டிய டூவீலர் திருடன்.

b

     TN 63AR 8762, TN 63AU 3125 மற்றும் TN 65T 5576 ஆகிய பதிவெண் கொண்ட வாகனங்கள் குறிப்பிட்ட ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளியில் அப்பல்லோ மருந்தகம், டிடி நகர் ஆப்டெக் கம்யூட்டர் நிறுவனம் மற்றும் எம்.ஆர்.பி.டிஜிட்டல் ஆகிய இடங்களில் காணாமல் போனதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகார் பதிவாக, சிரத்தையோடு வாகனத்தையும், திருடனையும் தேடி வந்தனர் காரைக்குடி குற்றப்பிரிவுப் போலீசார். இவர்களுக்கு உறுதுணையாக ஆங்காங்கேப் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா வீடியோக்களும் திருட்டு சம்பவத்தை படம்பிடித்துக் காட்ட, அத்தனை வண்டிகளையும் திருடிய டூவீலர் திருடன் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் என்பது முடிவானது. அதனடிப்படையில் புதுக்கோட்டைப் போலீசாரின் உதவியுடன் டூவீலர் திருடனைக் கஸ்டடி எடுத்து அவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் எட்டு இருசக்கர வாகனங்களை மீட்டது காரைக்குடி குற்றப்பிரிவுப் போலீஸ்.

b

 " மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் என மூன்று மாவட்டப் போலீசாருக்கும் "தண்ணீக்"காட்டியவன் அவன். தனியார் நிறுவனப் பைனான்ஸ் நிறுவனத்தில் மாதத் தவனைக் கட்டாத டூவீலர்களை சீஸிங் செய்யும் வேலைப் பார்த்து வந்த அவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனையே முன் அனுபவமாகக் கொண்டு வண்டிகளைத் திருட ஆரம்பித்திருக்கின்றான். கடந்தாண்டு டிசம்பர் மாதம் காரைக்குடி வந்து நோட்டமிட்டு சென்றவனை, வேறொரு வழக்கில் சிறையிலடைத்தது புதுக்கோட்டைப் போலீஸ். கடந்த ஏப்ரல் 22 சிறையிலிருந்து வெளிவந்தவன் தொடர்ச்சியாக மறுபடியும் திருட்டுத் தொழிலை ஆரம்பித்துள்ளான். 

b

தொடர்ச்சியாக அவன் கை வைப்பது ஸ்ப்ளண்டர் வாகனங்களை மட்டுமே..! அது என்னடாவென்றால்..? " சார்.!! அதுக்குத்தான் டிமாண்ட் இருக்கு.. வேலையும் வைக்காது. சட்டுன்னு காசு கைக்கு வந்திடும்னு எத்திக்ஸ் பேசுறான்". திருடிய வாகனங்களை அவன் விற்பது இல்லை. அத்தனை வாகனங்களையும் புதுக்கோட்டை, கீரனூர் மற்றும் இலுப்பூர் பகுதிகளில் அடகு வைத்திருக்கின்றான். அது அத்தனையையும் மீட்டுள்ளோம்." என்கின்ற காரைக்குடி குற்றப்பிரிவுப் போலீஸ் அவனை ரிமாண்டிற்கு அனுப்பியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிணற்றில் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Two people loses theri livetrying to pick up a bike that fell into a well

கன்னியாகுமரியில் கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலிங்கம். செங்கல் சூளை தொழிலாளியாக இருந்த ஸ்ரீ லிங்கம் கிணற்றில் விழுந்த பைக்கை எடுப்பதற்காக கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதற்கு பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவனையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

இந்தநிலையில் இருவரும் கிணற்றுள் இறங்கி பைக்கை மீட்க முயன்ற போது பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்ததால் தண்ணீரில் ரசாயன கலப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உயிரிழந்தனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுள் இறங்கி ஸ்ரீலிங்கம் மற்றும் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பைக்கை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய இருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ - பைக் டாக்சிகளுக்கு தடை!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
ban on bike taxis in karnataka

வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் ஊஃபர், ரேபிடோ போன்ற சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த அனுமதியால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூர் பகுதியில் பைக் டாக்சியில் சென்ற பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. 

இந்த நிலையில், இந்த மின்சார பைக் டாக்சி திட்டத்துக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மின்சார பைக் டாக்சி திட்டம், மோட்டார் வாகன சட்டத்தை மீறுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படுகிறது. மேலும், இந்த இருசக்கர மின்சார வாகனங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. வாகன நம்பர் பிளேட் இல்லாத மின்சார வாகனங்களால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், கர்நாடகாவில் இந்த மின்சார பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.