Skip to main content

மகளிர் எஸ்.ஐ-யை மிரட்டிய அமைச்சரின் உதவியாளர்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

சாதாரன குடும்ப பிரச்சனை வழக்கு ஒன்றில், தங்களுக்கு சாதகமாகத் தான் நடந்து கொள்ளவேண்டுமென அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்த எஸ்.ஐ. முதற்கொண்டு அனைத்துப் போலீஸாரையும் அதட்டி, மிரட்டிள்ளார் தமிழக வணிகவரித் துறை அமைச்சரான கே.சி வீரமணியின் உதவியாளர் ஒருவர்.

 

m

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் திவ்யலெட்சுமிக்கும், கீழப்பூங்குடியை சேர்ந்த குமரேஷிற்கும் 14/11/18 அன்று திருமணம் நடைப்பெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் சென்னையில் வசிக்க நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று,  "தன்னுடைய கணவர் வீட்டார் ரூ.10 லட்சம் வரதட்சனையாக வாங்கி வரவேண்டுமென வற்புறுத்துகின்றனர்." என திவ்யலெட்சுமி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, இருதரப்பினையும் அழைத்து புகாரின் மீதான விசாரணையை தொடங்கியுள்ளது எஸ்.ஐ.ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார்.

 

p

 

இவ்வேளையில், தமிழக வணிகவரித் துறை அமைச்சரான கே.சி வீரமணியின் உதவியாளர் எனக் கூறிக்கொண்டு வசந்தகுமார் என்பவர், " எதுக்கு விசாரணை.? உடனடியாக எப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தூக்கி வையுங்க.! எஸ்.பிக்கிட்டே பேசியாச்சு.. செய்ய வேண்டுமென்றால் எஸ்.பி.யை பேச சொல்லவா.?" என அதட்டி மிரட்டியதோடு அல்லாமல், "இன்னென்ன பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்யுங்க." என சவுண்ட் விட, மகளிர் காவல் நிலையமே அல்லோகலப்பட, வேறு வழியில்லாமல் அமைச்சரின் உதவியாளர் கூறிய பிரிவுகளிலேய கு.எண்:11/19 - 498 (A), 406, 506 (1) IPC மற்றும் 407 DP Actபடி வழக்கினைப் பயத்தோடு பதிவு செய்துள்ளது.

 

  மகளிர் நிலையப் போலீஸாரோ, " மதியத்திலிருந்து இரவு 7 மணி வரை அமைச்சரோட உதவியாளரால் மிரட்டப்பட்டது உண்மை தான்.! இந்த வழக்கினைப் பொறுத்தவரை எப்.ஐ.ஆர்.என்பது நிச்சயம். விசாரித்து தான் பதிவு செய்ய முடியும். அதுக்குள்ளே.! நான் இன்னார் ஆள், எஸ்.பி சாரை பேச சொல்லவா.? என்றால் பயப்படாமல் இருக்க முடியுமா.? வேறு வழியில்லை உடனடியாக வழக்கைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று." என்கின்றனர் அவர்கள். புகார்தாரருக்கு அமைச்சரின் உதவியாளர் என்ன உறவுமுறை என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.?

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.