Skip to main content

அவரை நீக்கலாமே..? காங்கிரஸ் எக்ஸ் எம்.எல்.ஏ-விற்கு எதிராக போர்க்கொடி..!!!!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

"தொண்டன் முதல் தலைவர் வரை அனைவருக்கும் நியாயம் ஒன்று தானே..? நாங்கள் தவறு செய்தால் எங்களை கட்சியிலிருந்து நீக்கியிருப்பீர்களே..? முன்னாள் எம்.எல்.ஏ. என்றால் நடவடிக்கை இல்லையா..?கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட அவரை நீக்கலாமே..?" என ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரும், இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர் சிவகங்கை மாவட்ட காங்கிரசார்.

 

congress


காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 1996ம் ஆண்டு த.மா.காங்கிரஸ் சார்பில் திமுக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினரான சுந்தரம், அதற்கடுத்து 2006ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் அதே திமுக கூட்டணியால் சட்டமன்ற உறுப்பினரானார். காங்கிரஸிற்கு எதிரான நிலைப்பாட்டில் ப.சிதம்பரம் இருந்த பொழுது மூப்பனாருடன் இணைந்து த.மா.கா-வை துவக்கிய போதும், அதிலிருந்து வெளியேறி காங்கிரஸ் ஜனநாயக பேரவை துவக்கிய போதும், அதன் பின் மீண்டும் காங்கிரஸ் வந்த போதும் உடனிருந்த சுந்தரம் தற்பொழுது ப.சி.-க்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கம்பு சுற்றுவது தான் காங்கிரஸ் தொண்டர்களை கொதிப்படைய செய்துள்ளது. 

புதனன்று சிவகங்கை மாவட்டத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களான முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் தொகுதியின் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் இணைந்திருக்க, " சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு இணக்கம் தெரிவிக்காமல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரம் வாக்கு சேகரித்து வருகின்றார். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்.! இவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை நீக்க வேண்டுமென," அனைவரின் கையிலும் முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரத்திற்கு எதிராக கண்டன தீர்மான கடித நகலை அளித்துள்ளனர் சிவகங்கை மாவட்ட காங்கிரசார். கடிதத்தைப் பெற்ற பொறுப்பாளர்களோ ஷாக்காகி புறப்பட்டது தான் ஹைலைட்டே.!

முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரத்திற்கு எதிராக கண்டனத் தீர்மானம் இயற்றி, கட்சியினரிடம் கையெழுத்து வாங்கிய சிவகங்கை மாவட்ட மனித உரிமைத்துறை மாவட்டத்தலைவரான கல்லல் ரமேஷோ., " அவர் விசுவாசமாக இருந்தார் என்பதால் கடைமட்டத் தொண்டனான அவரை இரண்டு தடவை எம்.எல்.ஏ-வாக்கி அழகுப் பார்த்தார் தலைவர் ப.சிதம்பரம். அந்த நன்றி இப்பொழுது இல்லை..! தலைவர் ப.சி., எம்.எல்.ஏ.ராமசாமி, எம்.பி.கார்த்தி சிதம்பரம், மாநிலத் தலைவர் மற்றும் இப்பொழுது வந்த தேசிய செயலாளர்கள் அனைவரும் சங்கராபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கையில், இவர் மட்டும் ஏன் எதிரணி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யனும்..? இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் இல்லையா.? தலைவனுக்கு ஒரு நியாயம்.! தொண்டனுக்கு ஒரு நியாயமா.? அதனால் தான அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சித்தலைமைக்கு கோரிக்கை வைத்தோம்." என்கிறார் அவர். இக்கடிதத்தால் மாவட்ட காங்கிரசார் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.