Skip to main content

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பொது சுகாதாரத் துறை..!

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
bas

 

     சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வெங்களுர் ஊராட்சியி நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான,  பொது சுகாதாரத் துறையின் மூலம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

 

   நகர்ப்பகுதிகளிலிருந்து கிராமப்பகுதி வரை உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் வண்ணம் பொது சுகாதாரத்துறையின் மூலம் அவ்வப்பொழுது சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் உடற்பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் நோக்கம் ஒரு மனிதன் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த குடும்பம் நிலையான செல்வத்தை பெறமுடியும் என்பதேயாகும்.

 

   அந்த வகையில்,  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வெங்களுர் ஊராட்சி பகுதிக்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவு, மருந்து கட்டுமிடம், ஊசி போடுமிடம், ஆய்வக பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு , பிரசவ பிரிவு மற்றும் வார்டு, தொற்றா நோய் சிகிச்சை பிரிவு, மருந்தகம் மற்றும் சேமிப்பு பிரிவு என மேற்கண்ட வசதிகளுடன் கட்டப்படுகிறது. மேற்கண்ட இக்கட்டிடத்திற்காக பூமி பூஜையை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் இல்ல விழா; கிராம மக்கள் கொண்டு வந்த திக்குமுக்காட வைக்கும் சீர்வரிசை

Published on 26/02/2023 | Edited on 26/02/2023

 

is a line of seers brought by the village itself; Brides and grooms

 

சிவகங்கை மாவட்டத்தில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 500 ஆடுகளுடன் சீர் செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்தவர் பொன்.மணிபாஸ்கர். மாவட்ட சேர்மனான இவர் அதிமுக சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளராக உள்ளார். இவரது மகள் ஹரிப்பிரியாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள ஓவியம் கார்டனில் நடந்தது.

 

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பித்தளைப்பாத்திரங்கள், குத்துவிளக்குகள் மற்றும் ஏறத்தாழ 500 ஆடுகளுடன் ஊர்வலமாக சென்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனுடன் பலகாரங்கள், பூக்கள், பூஜைப் பொருட்கள், உடைகள் என 350க்கும் மேற்பட்ட தாம்பூலத் தட்டுகளுடன் கிராம மக்கள் திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்தியது கவனத்தை ஈர்த்துள்ளது.

 

 

Next Story

ஆடுகளைத் திருடிய கல்லூரி மாணவர்கள்... கைது செய்த காவல்துறை!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

College students arrested for stealing goats

 

தேவக்கோட்டை பகுதியில் ஆடுகளைத் திருடியதாக ஆறு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை பகுதியில் சமீப காலமாக ஆடுகள் காணாமல் போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் இரண்டு இருசக்கர வாகனங்களில் இரண்டு ஆடுகளைக் கொண்டு வந்தனர். 

 

அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆடு திருடியது தெரிய வந்தது. மேலும், விசாரணையில் இவர்கள் ஆறு பேரும் திருவாடானையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கல்லூரி மாணவர்கள் ஆடு திருடிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.