Skip to main content

மனைவி, பிள்ளைகள் மீதான பாசம்... ஆறு நாளில் ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து வந்த சுப்பையா... 

Published on 26/04/2020 | Edited on 26/04/2020

 

சிவகங்கை மாவட்டம், காளையர் கோவில் அடுத்த சருகனி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. 48 வயதாகும் இவர், டைல்ஸ் ஒட்டும் பணியைச் செய்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முதலில் சிவகங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊர்களில் வேலை செய்து வந்த சுப்பையா பின்னர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் சென்று அங்கேயே தங்கியிருந்து டைல்ஸ் ஒட்டும் பணிகளை மேற்கொண்டார். தற்போது அவர் ஹைதராபாத்தில் டைல்ஸ் ஒட்டும் பணியைச் செய்து வந்தார்.

 

 

sivagangai



இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் சாதாரணமாக எடுத்துகொண்டார் சுப்பையா. விரைவில் ஊரடங்கு முடிந்துவிடும் என நினைத்தார். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதும் அது குறித்து கவலை அடைந்தார். மனைவி, மகன்கள், மகளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த சுப்பையா, ஹைதராபாத்தில் இருந்து சிவகங்கை வரை ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க முடியுமா? வழியில் உணவு கிடைக்குமா? தண்ணீர் கிடைக்குமா? எங்கு உறங்குவது? எங்கு ஓய்வு எடுப்பது? என பலவிதமாக யோசித்தார். 
 

மனைவி, மகன்கள், மகள் மீதான பாசத்தில் தூரம், உணவு என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடந்த 19- ஆம் தேதி நடக்க ஆரம்பித்தார். கர்னூர், குப்பம், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை வழியாக இரவு பகல் பாராமல் நடந்து வந்திருக்கிறார். வழியில் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வழியில் கொடுக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடந்துள்ளார். சிவகங்கை எல்லையில் உள்ள சோதனைச் சாவடியை 6- ஆவது நாளில் அடைந்துள்ளார். 
 

http://onelink.to/nknapp

 

sivagangai

 

அந்தச் சோதனைச் சாவடியில் சுப்பையாவை காவல்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து நடந்து வந்ததாக சுப்பையா சொன்னவுடன், காவல்துறை ஆய்வாளர் மோகன் அவரை, 'முதலில் உட்காருங்க' எனச் சொல்லி அவருக்கு உணவு ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் முகக் கவசம், ஆயிரம் ரூபாய் பணம், அரிசியைக் கொடுத்ததுடன், சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள செய்தார். பின்னர் சுப்பையாவை அவரது கிராமத்திற்கு அனுப்பி வைத்தார் காவல் ஆய்வாளர்.

மனைவி, பிள்ளைகள் மீதான பாசம் சுப்பையாவை ஆறு நாளில் ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.