Skip to main content

வேப்பிலை வேலி.. எல்லையில் ஊர்க்காவல்.. கரோனாவிற்கு சவால் விடும் கிராம மக்கள்.!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

sivagangai village people Mistletoe in village entrance

 

 
ஊரின் முகப்பில் வேப்பிலையால் வேலி அமைத்து, வெளியூரிலிருந்து அந்நிய நபர்கள் ஊருக்குள் வந்துவிடக்கூடாதென சுழற்சி முறையில் காவல் காத்து மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கரோனா வைரஸிலிருந்து தங்கள் மக்களை காத்து வருகின்றனர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவினை சேர்ந்த மதகுப்பட்டி, காந்திநகர் கிராம மக்கள்.

 

கரோனா பெருந்தொற்றுக் காரணமாக மக்களை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பம்பரமாக சுழன்று களப்பணியாற்றும் வேளையில், அரசிற்கு ஒத்துழைக்கும் விதமாக தங்களாலான முயற்சிகளை கையிலெடுத்து செயல்படுத்தி வருகின்றனர் சிங்கம்புணரி தாலுகாவிலுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய பறம்பு மலை எனப்படும் பிரான்மலையின் அருகிலுள்ளது மதகுப்பட்டி மற்றும் காந்தி நகர் கிராமங்கள். 400க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்தின் அடிப்படைத் தொழில் விவசாயம் என்றாலும், பகுதி நேரமாக கூலிக்கு பூக்கட்டும் வேலையை செய்து வருகின்றனர்.

 


இவர்கள் தமிழக அரசிற்கு ஒத்துழைப்பு நல்கும் விதமாக, தங்களை தாங்களேக் காப்பாற்றிக் கொள்ள வியாபாரிகள், வெளியூர் நபர்கள் ஊரின் உள்ளே வராமல் தடுக்க ஊரின் முகப்பில் மரங்கள், கயிறுகள் கொண்டு வழியை மறித்து வேப்பிலையால் வேலி அமைத்துள்ளனர். அது போக, வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகளை தடுக்கும் இக்கிராமத்தினர், பணிக்காக பக்கத்து கிராமங்களுக்கு சென்றுவிட்டு வருபவர்களை கண்காணித்து ஊரின் உள்ளே வரும் பொழுது அவர்களுக்கென தனித்தனியாக சோப், சானிடைசர் கொடுத்து கை, கால் கழுவியபின்னரே அனுமதிக்கின்றனர். இதற்கென ஊரின் எல்லையை கண்கானிப்பதற்கென்று சுழற்சி முறையில் ஆட்களை நியமித்து காவல்காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

படம்: விவேக்

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.