Skip to main content

உதவி செய்வது போல் கொலை, கொள்ளை.. சிக்கிய இரு வாலிபர்கள்..!!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

வயதான தம்பதிகளுக்கு மருந்து, மாத்திரை, மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தல் உள்ளிட்ட பல தேவைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து சரியான தருணம் பார்த்து அவர்களை கொன்று மற்றும் கொள்ளையடித்த இரு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
 

murderes

 

 

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் பிள்ளையார்கோவில் பின்புறம் செட்டியார் தெருவினை சேர்ந்தவர் ஆதப்பன்(82), மீனாட்சி(78) தம்பதியினர். இவர்களது மகன் வேலை நிமித்தமாக தஞ்சாவூரில் வசிக்கும் சூழலில் இவர்களிருவரும் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்துள்ளனர். நேற்று முந்தின இரவில், கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில், ஏற்கனவே வீட்டினுள் இருந்த இரு வாலிபர்கள் இவர்களை தாக்கி துன்புறுத்தி, " நகை, பணத்தை கேட்டிருக்கின்றனர். அவர்கள் மறுக்கவே,  மீனாட்சியை அருகிலிருந்த சுவற்றில் வைத்து முட்டித்தள்ள சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். அதே வேளையில் ஆதப்பனை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை மிதித்து நகை, பணம் இருக்குமிடத்தை கேட்டுள்ளனர். ஒருக்கட்டத்தில் அவரும் இறந்ததாக எண்ணி மீனாட்சி கழுத்திலிருந்த 10 பவுன் மதிப்புள்ள செயின், காதில் இருந்த தோடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டவர்கள், அங்கிருந்த வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர். நேற்று காலைப் பொழுதில் வழக்கமாக பால் ஊற்ற வருபர்களுக்கு வீடு திறந்து கிடந்ததால் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் கூற, அவர்களும், இறந்த நிலையில் கிடந்த மீனாட்சியையும், மயங்கிய நிலையிலிருந்த ஆதப்பனையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சிவகங்கை புதூரை சேர்ந்த கணேசன், மற்றும் வேப்பத்தூர் பச்சேரியை சேர்ந்த செல்லபாண்டி என்பவர்களை கைது அவர்களிடமிருந்து 5 சவரன் நகை, 15 ஆயிரம் ரொக்கத்தினையும் பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், " உறவுக்காரர்கள் இல்லாத வயதான ஆட்களை தேர்வு செய்வோம். மருந்து மாத்திரை வாங்குவதற்கே சிரமப்படும் அவர்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து அவர்களுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்வோம். பிறகு அவர்களது வீட்டிலிருக்கும் பொருட்களை எடுத்து விற்க ஆரம்பிப்போம். அன்றைய சூழலில் திருமணத்திற்கு செல்வதற்காக வங்கியிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்து வைத்திருந்தார் ஆதப்பன். அதனை அபகரிக்க முன்கூட்டியே அவரது வீட்டினில் உள்ளே சென்று காத்திருந்து இந்த செயலை செய்தோம்." என்றிருக்கின்றனர் கைது செய்யப்பட்ட இருவரும். இவர்கள் தான் அன்று வந்தார்கள் என சிகிச்சைப்பெற்று வரும் மருத்துவமனையிலேயே அடையாளம் காட்டியிருக்கின்றார் ஆதப்பன். தொடர்ந்து நடைப்பெற்று வரும் விசாரணையில் இதுபோல் வேறு எங்கேயாவது சம்பவம் செய்துள்ளார்களா..? என விசாரித்து வருகின்றனர் மதகுப்பட்டி காவல்துறையினர். உதவி எனும் பெயரில் கொலை கொள்ளை சம்பவம் நடைப்பெற்றதால் இங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.