ADVERTISEMENT

காவல் துறையில் நவீனம் -சிவகங்கை எஸ்.பிக்கு மத்திய அரசு விருது!

08:32 AM Mar 16, 2020 | santhoshb@nakk…

குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்காணிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் 'இ-பீட்' செயலியை அறிமுகப்படுத்தினார்.

ADVERTISEMENT

இதன்மூலம் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார், தற்போது எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை உயர் அதிகாரி இருந்த இடத்தில் இருந்தே செல்போன் மூலம் கண்காணிக்க முடியும். இதை தொடர்ந்து நீதிமன்ற இ-வாரண்ட், இ-சம்மனையும், இ-பீட் உடன் இணைத்து ரோந்து போலீஸார் மூலம் உடனுக்குடன் குற்றவாளிகளுக்கும், சாட்சிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.

ADVERTISEMENT


குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடத்தை பிடித்தது. இதனால் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அண்மையில் விருது வழங்கப்பட்டது. தமிழக டிஜிபியும் எஸ்பி ரோஹித் நாதனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT