Skip to main content

கொலை வழக்கில் 16 நபர்களுக்கு ஆயுள் தண்டனை- சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கிராமம் முழுவதுமுள்ள வயல்களில் ஆட்டுக்கிடை போடப்பட்டிருக்க, தன்னுடைய வயலிலும் ஆட்டுக்கிடை போடவேண்டுமென எழுந்த தகராறில் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த கொலை வழக்கில் 16 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது மாவட்ட முதன்மை நீதிமன்றம்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல்நிலைய சரகம் கச்சநத்தம் கிராமத்தினை சேர்ந்தவர் சந்திரகுமார். இதே கிராமத்திலுள்ள வயல்களில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த முனியாண்டி என்பவர் வருடந்தோறும் ஆட்டுக்கிடை போடுவது வழக்கம். சம்பவ நாளான 2010 ஆகஸ்ட் மாதம் 30ம் தேதியன்று காலை 10.00 மணியளவில் சந்திரகுமார் முனியாண்டியை சந்தித்து தன்னுடைய வயலிலும் ஆட்டுக்கிடை போடவேண்டுமென கேட்டிருக்கின்றார்

SIVAGANGAI INCIDENT CASE JUDGEMENT HAS ANNOUNCED JUDGE

"உனக்கு மட்டும் கிடை போட முடியாது." என மறுத்துக்கூறிய நிலையில் இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியுள்ளது. சுற்றியுள்ள பொதுமக்கள் இருவரையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். மதியம் 02.30 மணியளில் ஆவரங்காடு ரேசன் கடை அருகே அல்லிமுத்து, சுரேஷ்குமார், பாண்டி மற்றும் மதி ஆகிய நபர்களுடன் சந்திரகுமார் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அதே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர், பூசைமணி, பாண்டிவேல், வீரபத்திரன், முனியாண்டி, அழகுபாண்டி, மற்றொரு முனியாண்டி, ராஜாங்கம், பழனியாண்டி, பிரபு, முத்துபாண்டி, ரதி, ராமாயி, மற்றொரு வீரபத்திரன், மைக்கேல், கணேசன், கருப்பையா மற்றும் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக வந்து வேல்கம்பு, கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய பொழுது அல்லிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் அப்பொழுதே பாண்டிவேல், வீரபத்திரன், மற்றொரு வீரபத்திரன், பூசைமணி உள்பட 6 பேர் சிவகங்கை ஜே.எம். நீதிமன்றத்தில் சரணடைந்தனர். திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் 124/2010 என்ற குற்றவழக்காக பதிவு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 9 வருடங்களாக இவ்வழக்கு நடைப்பெற்று வந்தது.


இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பாக, "குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 18 நபர்களில் சேகர் மற்றும் செல்வராஜ் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 16 நபர்களுக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக." அறிவித்தார் சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன். 9 வருடங்கள் கடந்த நிலையில் 16 நபர்களுக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதால் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மதுரை, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Madurai, Sivagangai Police S.P. Transferred!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.