Skip to main content

சிதைக்கப்பட்ட பாலிடெக்னிக் மாணவர்... காட்டிக்கொடுத்த மண்ட திவாகர்!

Published on 15/09/2019 | Edited on 15/09/2019

திருடிய நகைகளை பங்கு பிரிப்பதில் ஒருவர் கொலை, ஒராண்டுக்குப் பிறகு அந்தக் கொலைக்குக் காரணமான பாலிடெக்னிக் மாணவரைக் கொன்று சிதைத்து ஆற்றுக்குள் புதைத்து பழி தீர்த்துக் கொண்டனர், கொலையுண்டவர்களின் உறவினர்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கொத்தங்குளத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் திருடுவதையேத் தொழிலாகக் கொண்ட முனியாண்டி நண்பர்களுடன் சேர்ந்து சில இடங்களில் கொள்ளையடித்து ராமேசுவரத்தில் வைத்து பங்கு பிரித்துள்ளனர். இதில் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட கொலை செய்யப்பட்டார் முனியாண்டி. கடந்த ஒராண்டுக்கு முன்பு நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பாலிடெக்னிக் மாணவரான அஜித்குமார் கைது செய்யப்பட்டு சிறார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். 

SIVAGANGAI DISTRICT THIEF INCIDENT POYTECHNIC STUDENT POLICE|

இந்நிலையில், கடந்த 4ம் தேதி திருப்புவனத்திலுள்ள தனது வீட்டிலிருந்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லையென்பதால் அவரது தந்தையான சுப்பிரமணியன் கடந்த 9ம் தேதி திருப்புவனம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மானாமதுரை டி.எஸ்.பி.கார்த்திக்கேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ-க்கள் மாரிக்கண்ணன், பாலமுருகன் உள்ளிட்டோரைக் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்த வேளையில் திருப்புவனம் வைகையாற்றுப் பகுதியில் புதைத்து வைத்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் அஜித்குமார்.

SUBA SRI


"அஜித்குமார் காணாவில்லை என்கின்ற புகார் வந்தவுடன் முதலில் சந்தேகப்பட்டது கொலையுண்ட முனியாண்டி குடும்பத்தார் மீது தீவிரமாக விசாரித்து வந்த வேளையில் அஜித்குமாரின் மொபைல் போனில் அடிக்கடி பேசிய மண்ட திவாகர் எங்களுடைய பார்வையில் பட்டார். அவரை அழைத்து தனிப்பட்ட முறையில் விசாரிக்கவே, " அஜித்குமாரை வைகையாற்றுப் பாலத்திற்கு வரவழைத்து முனியாண்டி உறவினர்கள் 7 நபர்களுடன் சேர்ந்து கொலை செய்து சிதைத்து ஆற்றிலேயே புதைத்ததாக ஒப்புக்கொண்டு புதைத்த இடத்தையும் காட்டவே டி.எஸ்.பி. மற்றும் தாசில்தார் முன்னிலையில் பாலிடெக்னிக் கல்லூரி  மாணவன் அஜித்குமாரின் பிணத்தை மீட்டோம். இது பழிக்கு பழி நடந்த கொலையே.!! மண்ட திவாகரை வைத்து மற்றவர்களை தேடி வருகின்றோம்." என்றார் தனிப்படை டீமிலுள்ள அதிகாரி ஒருவர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் கொலையுண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.