Skip to main content

ஆசிரியரின் சமயோசிதம்... சிறைப்பிடிக்கப்பட்ட திருடன்..!!!!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

வீட்டிலுள்ள அனைவரும் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டுக் கதவினை உடைத்து திருட முயன்ற திருடனை சிறைப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் தெருவாசிகள்.

SIVAGANGAI DISTRICT TEACHER HOUSE INCIDENT POLICE

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆனந்தா நகர் பகுதியில் வசிப்பவர் அமல்ராஜ் கென்னடி. இவர் அருகிலுள்ள ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி சகாயமேரியுடன் தனது பள்ளி ஆண்டுவிழாவிற்கு சென்றிருக்கையில், இரவு 7 மணியளவில் தன் வீட்டிலுள்ள சிசிடிவி திருப்பி வைக்கப்பட்டிருப்பது தன்னுடைய மொபைல் மூலம் தெரியவந்திருக்கின்றது. 

SIVAGANGAI DISTRICT TEACHER HOUSE INCIDENT POLICE

சந்தேகமடைந்த தலைமையாசிரியர் தன்னுடைய மொபைலின் துணைகொண்டு சிசிடிவி-யை ரீவைண்ட் செய்து பார்க்கையில், யாரோ ஒரு நபர் தனது வீட்டுக்கதவினை உடைத்ததும், சிசிடிவியை திருப்பி வைப்பதும் தெரியவர அங்கிருந்த படியே, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் கொடுத்திருக்கின்றார். பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளிட்ட தெருவாசிகள் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று கதவு உடைத்திருப்பதனை அறிந்து வெளியில் இருந்தபடியே, திருடனை உள்ளே வைத்து பூட்டிய பின்பு, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினரும் உடனே வந்து வீட்டிற்குள் நுழைந்து திருடனை பிடித்து விசாரிக்கையில், அவனது பெயர் ராபின் எனவும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவன் எனவும், அவன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் புலனாகியுள்ளது. ஆசிரியரின் சமயோசிதத்தால் திருடன் அகப்பட்ட சம்பவத்தை எண்ணி சிலாகிக்கின்றனர் தெருவாசிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.