Skip to main content

சிவகங்கையில் இன்று மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

SIVAGANGAI DISTRICT PANCHAYAT PRESIDENT ELECTION

நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் இன்று (11/12/2020) நடக்கிறது. 

 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11/12/2020) காலை 10.00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் செந்தில், அ.தி.மு.க. சார்பில் பொன்மணி பாஸ்கர் போட்டியிடுகின்றனர்.

 

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 16 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. இந்த 16 வார்டுகளில் அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி தலா 8 வார்டில் சமமாக வெற்றி பெற்றதால் இன்று தேர்தல் நடக்கிறது. 

 

ஜனவரி 11, 30, மார்ச் 4, டிசம்பர் 4 என ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்கப்பட உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கதவ திறங்க..... வீட்டிற்குல் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டித் தள்ளிய கும்பல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
bagwari gang style Robbery in Sivaganga

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது கல்லுவழி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. 40 வயதான பாரி கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி அரசி, இவருக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு ஜெர்லின் என்ற 14 வயது மகளும், ஜோபின் என்ற 10 வயது மகனும் உள்ளனர். வெளி நாட்டு வேலையில் பிசியாக இருந்து வரும் ஜேக்கப் பாரி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் வெளி நாட்டுக்கு சென்று விடுவார். இவரின் தந்தை சின்னப்பன். இவருக்கு 67 வயதாகிறது. இவரின் மனைவி உபகாரமேரி இவருக்கு 65 வயது ஆகிறது. 

இந்நிலையில், ஜேக்கப் பாரியின் குடும்பத்தில் உள்ள 5 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல தங்களது வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென அதிகாலை 3 மணியளவில் யாரோ வீட்டை தட்டியதாக சொல்லப்படுகிறது. அதிகாலை நேர்த்தில் யாராக இருக்குமென நினைத்த ஜேக்கப்பின் தந்தை, எழுந்து சென்று கதவை திற்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் கண் மூடித்தனமாக முதியவரை வெட்டியுள்ளது. உடனே முதியவர் சின்னப்பன் கூச்சலிட்டுள்ளார். அதனைக் கேட்டு அவரின் மனைவி மற்றும் மருமகள் பேரன் பேத்தி என அனைவரும் ஓடி வந்துள்ளனர். அப்போது, அடுத்தடுத்து ஓடி வந்த அனைவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த 5 பேரும் வீட்டுக்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் மயக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். 

பின்னர், சிறிது நேரம் கழித்து காலையில் சிறுவன் ஜோபின் கண் விழித்துள்ளான். அப்போது, தனது அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா என அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனே, சம்பவம் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்த அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடி சென்று நின்றுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் உள்ள யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தக் கொடூர தாக்குதலால் கோபமடைந்த பொதுமக்கள், மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுவழி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொள்ளை கும்பல்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர், மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 5 பேரை சரமாரியாக வெட்டி விட்டு, கொள்ளயடித்த சம்பவம் காளையார்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஆயிரம் ஆண்டுகள் பழமையான பைரவர் சிலை மற்றும் சூலக்கல் கண்டுபிடிப்பு

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

thousand-year-old statue of Bhairava and a stone find

 

திருப்புவனம் திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் பதினோராம் நூற்றாண்டு பைரவர் சிலை மற்றும் சூலக்கல்லை சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா,செயலர் இரா. நரசிம்மன் அடையாளம் கண்டுள்ளனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது; திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயப்பன் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக்குழுவினர் திருப்பாச்சேத்திக்கு வடகிழக்கு பகுதியில் வைகைக் கரையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மழவராயனேந்தல் வடக்கு வாச்செல்லி உத்தம நாச்சியம்மன் கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம்.

 

பதினோராம் நூற்றாண்டு பைரவர் சிலை;

 

வடக்கு வாச்செல்லி உத்தம நாச்சியம்மன் கோவிலில் என்ன சிலை என்று தெரியாமல் ஒரு சிலை வணங்கப்படுவதாகவும், அச்சிலையை அடையாளம் காணுமாறும் தெரிவித்ததின் அடிப்படையில் மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அவர்களின் உதவியுடன் அச்சிலை பைரவர் சிலை என்றும், அது பதினோராம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

thousand-year-old statue of Bhairava and a stone find

 

பைரவர் சிலை;

சிவ மூர்த்தங்கள் 64 இல் ஒன்றாக பைரவர் வடிவமும் உள்ளது. பொதுவாக பைரவர் சிலை நின்ற கோலத்தில் சூலம், உடுக்கை, பாசக்கயிறு போன்றவற்றை கையில் வைத்திருப்பதோடு, நிர்வாணக் கோலத்தில் நாய் வாகனத்தோடும் அமைக்கப்பட்டிருக்கும். இங்கே காணப்படும் பைரவர் இரண்டு கைகள் மட்டுமே உடையதாகவும் ஒரு கை இடுப்பிலும் மற்றொரு கை அருள்பாலித்த வடிவிலும் காட்டப்பட்டுள்ளன. கழுத்து மற்றும் இடையில் ஆபரணங்கள் காணப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலையாக இருப்பதால் முகம் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.

 

காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோவில்;

இக்கோவிலுக்கு அருகில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் நிர்வகிக்கும் காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலப்பகுதியில் முன்னாளில் கபாலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகவும், தற்போது சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோவில் என்ற பெயரில் பழைய சிவன் கோவில் ஒன்று இருந்து முற்றிலும் அழிவுற்ற நிலையில், அவ்விடத்தில் பழமையான நந்தி சிலை மற்றும் ஆவுடை இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளன. அங்கிருந்தே இந்த பைரவர் சிலை காலப்போக்கில் வடக்கு வாச்செல்லி உத்தம நாச்சியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்திருக்கலாம்.

 

சூலக்கல் வழிபாடு;

 

சிவன் கோவிலுக்குரிய நிலங்கள் எல்லை அளவிட்டு அடையாளப் படுத்த சூலக்கல் நடப்பட்டிருக்கும். அவ்வாறான சூலக்கற்கள் மக்கள் வழிபடும் கடவுளாகவும் மாறிப்போயிருக்கின்றன. வடக்கு வாச்செல்லி உத்தம நாச்சியம்மன் கோவிலில் சூலக்கல் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது.  சிவன் கோவிலுக்கு அளவிட்டு வழங்கப்பட்ட எல்லைக்கல் எங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு நடப்பட்டு பின்பு வழிபாட்டுக்கு உரியதாக மாறி இருக்கலாம். பழமையான சிலை மற்றும் சூலக்கல் அடையாளம் காணப்பட்டதில் சிவகங்கை தொல்நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என்றார்.