SIVAGANGAI DISTRICT PANCHAYAT ELECTION ADMK WIN

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றிப் பெற்றுள்ளார்.

Advertisment

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11/12/2020) காலை 10.00 மணி நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் செந்தில், அ.தி.மு.க. சார்பில் பொன்மணி பாஸ்கர் போட்டியிட்டனர்.

Advertisment

வாக்குப்பதிவு நிறைவடைந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்களுக்கு தலா 8 வாக்குகள் கிடைத்தது தேர்தல் சமநிலையில் முடிந்ததால் குலுக்கல் முறையில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று (11/12/2020) மதியம் 03.00 மணிக்கு மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.

Advertisment

ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4, டிசம்பர் 4 என நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி- 8 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி- 8 வார்டுகளிலும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.