சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "கரோனாவிலிருந்து காத்துக் கொள்ளுமாறு ஹெச்.ராஜா தினமும் எங்களை அறிவுறுத்தி வருகிறார். பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம். மு.க.அழகிரி மவுனம் கலைத்தால் தான் தி.மு.க.வின் நிலைப்பாடு தெரியவரும். அரசியல் உள்நோக்கமின்றி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சுவரொட்டிகளைப் பயன்படுத்தலாம்" என்றார்.