Skip to main content

அப்பவே நாங்க அப்டேட்...சுடுமண் காதணிகள், சிற்பங்கள், சங்கு வளையல்கள்...இன்றைய நவ நாகரீகத்துக்கு முன்னோடி கீழடியே...!!!!

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

உலகின் தொன்மையான, முதன்மை நாகரீகம் தமிழனின் நாகரீகமே எனப் பறைச்சாற்றி வருகின்றது. கீழடி அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்த 5ம் கட்ட ஆய்வில் சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் சிற்பங்கள் மற்றும் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் பண்டைய மக்களின் வரலாற்று அறிய தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆய்வுகள் நடைப்பெற்று வருகின்றன. அனைத்து ஆய்வுகளிலும் தமிழனின் நாகரீகமே முதன்மையானது எனத் தெரிய வர, ஆய்விற்கு சில தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. அதனால் அகழ்வாராய்ச்சியும் தடைப்பெற்றிருந்தன. தமிழர்களின் எழுச்சிமிகுப் போராட்டத்தால் தொடர்ந்து ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக கருப்பையா, முருகேசன், போதகுரு, மாரியம்மாள், நீதியம்மாள் ஆகியோரது ஏழு ஏக்கர் நிலங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. 
 

இதுவரை நடந்த நான்கு கட்ட அகழாய்வை விட 5ம் கட்ட அகழாய்வில் பெண்கள் அணியும் ஆபரணங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. அதுவும் அந்த ஆபரணங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டு அவற்றையே அப்போதைய பெண்கள் அணிந்து இருந்தனர் என கூறப்படுகிறது. கிடைக்கப்பெற்ற வட்ட வடிவிலான சுடுமண் காதணியின் உட்புறமும் வெளிப்புறமும் பூக்கள் உருவம் வரையப்பட்டிருக்க, கூடுதலாக பெண்களின் சங்கு வளையல்கள் மற்றும் சுடுமண் சிற்பங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இதே வேளையில், முருகேசன் என்பவரது நிலத்தில் கூடுதலாக ஆறு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.


இதில் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செங்கற்களால் கட்டப்பட்ட இந்த தொட்டியின் தரைப்பகுதியிலும் செங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 4 அடி உயரமும், 2 அடி அகாலமும், 5 அடி நீளமும் கொண்ட இந்த தொட்டியின் பயன்பாடு குறித்து எதுவும் தெரியவில்லை.
 

தொல்லியல் அதிகாரி ஒருவரோ, " சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது, எளிதில் சேதமடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம். அது போக, இது கடலோர பகுதிக்கு அருகில் என்பதால் பெரிய அளவிலான சங்குகள் கிடைத்துள்ளன. அவற்றில் இருந்து வளையல்கள் உள்ளிட்டவைகள் செய்து பயன்படுத்தியுள்ளனர். இதுவரை நடந்த 4ம் கட்ட அகழாய்வில் கூட சுடுமண் அச்சுகள், ஒருசில ஆண், பெண் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் அவைகள் ஒழுங்கற்றவைகளாக இருந்தன. 
 

ஆனால் இப்போது கண்டறியப்பட்டுள்ள சிரித்த முகத்ததுடன் சிறிய அளவிலான சிற்பங்கள் மனித முகம், விலங்கு முகம் கொண்டும், தலையில் கொண்டை போன்ற அமைப்புடனும் கிடைத்துள்ளது. அது போல் இப்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள தண்ணீர் தொட்டியோ குடிப்பதற்கான பயன்பாட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லை. எனினும் அத்தொட்டியில் இரும்புக்கழிவுகள் இங்கு அதிகளவில் கிடைத்திருப்பதால் இரும்புத் தொழிற்சாலையில் இருந்து இரும்பை குளிர்விக்க இதனைப் பயன்படுத்தி இருக்கலாம் எனத் தெரிகின்றது என்றும், ஆய்வின் முடிவே இறுதியானது." என்கிறார் அவர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.