Skip to main content

உங்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை...அப்புறம் எதற்கு நீங்க? சிறை வைக்கப்பட்ட அதிகாரிகள்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை சிறைப்பிடித்து எழுச்சிப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர் கிராம பொதுமக்கள்.

 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளது ஆழி மதுரை. சுமார் 400 குடும்பங்கள் வசிக்கும், இந்த ஊருக்கு நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை உள்ளது. ஐந்து நாளைக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடி நீர்த்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் நீர் தான் இங்கு ஆதாரம். இந்த தண்ணீர் பஞ்சத்தால் இடம் பெயர்ந்தவர்கள் ஏராளம். இது ஒருபுறமிருக்க, மயானப் பாதை, கருப்பண்ணசுவாமி கோயில் பாதை ஆகிய இடங்களை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததால், இவர்களால் அந்தப் பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை   உருவாகியது. இதனால், ஆக்கிரமிப்பு செய்த தனியாரை அப்புறப்படுத்த வேண்டுமெனவும், குடிநீர் முறையாக விநியோகிக்க வேண்டுமெனவும் பல வருடங்களாக போராடி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

SIVAGANGAI DISTRICT CM PUBLIC GRIEVANCE OFFICERS ARREST IN PEOPLES


இந்நிலையில், சனிக்கிழமையன்று முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டத்தினை நடத்த ஆழிமதுரை ஊராட்சி அலுவலகத்திற்கு மண்டல துணை வட்டாட்சியர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா, ஊராட்சி ஒன்றிய ஊழியர் ஆகியோர் வந்தனர். கூட்டம் தொடங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று வந்த நிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி என்பவரின் தலைமையில் வந்த பொதுமக்கள் அதிகாரிகளை அலுவலகத்திலேயே பூட்டி வைத்து , " உங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. அப்புறம் எதற்கு நீங்க? வேண்டுமெனில், எங்களது கோரிக்கைளை நிறைவேற்றி விட்டு, அதன் பிறகு மற்ற மனுக்களை வாங்கலாம்" என சிறைப்பிடித்தனர். 
 

SIVAGANGAI DISTRICT CM PUBLIC GRIEVANCE OFFICERS ARREST IN PEOPLES


தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த தாசில்தார் பாலகுரு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை மீட்டார். பின்னர் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கிராம நிர்வாக அதிகாரியிடம் புகாரை வாங்கி வழக்குப் பதிவு செய்தது இளையான்குடி காவல்துறை. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.