Skip to main content

மூன்றடி நீளமிருக்கும்.. அசந்தால் அடிச்சிருக்கும்...கிலி ஏற்படுத்திய புலி..?!!!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

"சார்.!! அது மூன்றடி நீளமிருக்கும்.. கொஞ்சம் அசந்திருந்தேன் என்றால் என்னை அடிச்சிருக்கும். இப்பத் தான் இந்தத் தோட்டத்துக்குள்ளே போச்சு.!" என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஊழியர் கல்யாணி தான் கண்ணால் பார்த்த புலியைப் பற்றி காவல்துறைக்கு தகவல் கூற, " மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஊரில் புலியா..?! என தங்களையேக் கிள்ளிப் பார்த்துக்கொண்டு ஊழியர் கொடுத்த தகவலை எடுத்து சம்பவட இடத்திற்கு விரைந்துள்ளது மானாமதுரை துணைச்சரக டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் டீம். அதற்குள் வனத்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் புலி தகவல் செல்ல அனைத்து துறையினரும் அங்கு ஆஜராகினர்.
 

sivaganga incident


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தை சேர்ந்த பீசர்பட்டினத்திலுள்ளது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வைகை ஆற்றுப்படுகையில் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் மோட்டார் இணைப்பிற்கான சிறிய கட்டிடம். வழக்கம் போல் குடிநீரை திறந்துவிடுவதற்காக, மோட்டாரை இயக்க காலை எட்டரை மணிக்கு வந்திருக்கின்றார் ஊழியர் கல்யாணி. " தூரத்தில் உறுமல் சத்தத்துடன் அசைந்து அசைந்து இவரை ஒரு உருவம் வர, கண்ணெக்கெட்டிய தூரத்தில் அது "புலி" என தெரிந்திருக்கின்றது. "புலியை" பார்த்த பதட்டத்தில் குரல் எழும்பாமல் கை காலை ஆட்ட முயற்சித்திருக்கின்றார். அசைவினைக் கண்ட "புலியும்" அங்கிருந்து அடுத்த தென்னந்தோப்பிற்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவித்திருக்கின்றார்." ஊழியர் கல்யாணி. 

டிஎஸ்பி கார்த்திக்கேயன், மாவட்ட வனத்துறை அலுவலர் ராமேசுவரன், தீயணைப்புத்துறை அதிகாரியும் இணைந்து தேடுதல் வேட்டையை துவக்க, " ஆமா.! சார் நாங்களும் பார்த்தோம்." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் தென்னந்தோப்பிலுள்ள வேலையாட்கள். கண்மாய்களில் கருவேல மரக்காடுகளை மட்டுமே கொண்ட மானாமதுரையின் புவியியல் அமைப்பில் அடர்வனம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
 

sivaganga incident


எனினும், வேட்டை நாய், வெடிகள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தி தேடுதல் பணியினை தொடர்ந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.