Skip to main content

சிவகங்கை சீமையை சிலிர்க்கவைத்த காங்கிரஸ் நிர்வாகி! மகன் திருமணத்தில் ருசிகரம்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

sivaganga Congress executive daughter marriage function viral

 

"நானும் தொழிலாளியாக இருந்தவன் தான். அதோட அருமை எனக்கு தெரியும்" எனச் சொல்லியபடி, தனது மகனின் திருமணத்தில் வேலை செய்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் செயல் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான ரெட்ரோஸ் பழனிச்சாமி சிவகங்கையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவரது மகன் விஷ்ணுவர்தன் என்பவருக்கு சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், மணமகனின் தந்தை ரெட்ரோஸ் பழனிச்சாமி செய்த செயல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திருமண விழாவிற்காக சமையல் செய்தவர்கள், ஒளிப்பதிவு செய்தவர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரையும் மேடைக்கு வரவழைத்த ரெட்ரோஸ் பழனிச்சாமி, அவர்களுக்கு தனது கையால் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இதனால் ஆச்சரியமடைந்த பணியாளர்கள், என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர். அதில் சிலர் கண்ணீரும் சிந்தினர்.

 

இதுகுறித்து அங்கு வேலை செய்த பணியாளர்கள் கூறும்போது, “கல்யாண பத்திரிகைலயே எங்களோட பெயர போட்டிருந்தாங்க. அப்போவே எங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நாங்க எத்தனையோ கல்யாணத்துக்கு போயிருக்கோம். வேலை செஞ்சா பணம் கொடுப்பாங்க.. அவ்வளவுதான். ஆனா, இந்த மாதிரி யாரும் எங்கள கௌரவப்படுத்தல. எங்களுக்கு சந்தோஷமா இருக்கு” என நெகிழ்ச்சியோடு பேசியிருந்தார்.

 

பின்னர், இந்த கதையின் நாயகனான ரெட்ரோஸ் பழனிச்சாமி கூறும்போது, "நானும் தொழிலாளியா இருந்தவன் தான். அதோட அருமை எனக்கு தெரியும். என்னோட மகன் கல்யாணத்துல வேலை செஞ்சவங்கள கௌரவப்படுத்தணும்னு நெனச்சேன். அதுனால தான் அப்படி பண்ணேன்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார். 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த செல்வப்பெருந்தகை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
selvaperunthagai who collected votes in support of Rahul Gandhi in wayanad!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத்,  சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.