Sithannavasal mount fire accident

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று சித்தன்னவாசல். சிறப்பு மிக்க குடைவரை ஓவியம், சமணர் படுக்கைகள் ஆகியவை இங்கு உள்ளன. இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி பல வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வரலாற்று ஆய்வாளர்கள் வந்து செல்கின்றனர்.

Advertisment

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு படகு சவாரி, சிறுவர் பூங்கா என பொழுதுபோக்குக்கான சாதனங்களும் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டது. மேலும், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நேற்று மாலை சித்தன்னவாசல் நுழைவாயில் அருகே யாரோ மர்ம நபர்களால் வீசப்பட்ட சிறு தீ சமணர் படுக்கை உள்ள மலை அடிவாரம் வரை வேகமாக பரவியது. அப்பகுதி பொதுமக்கள் போலீசார் உதவியுடன் சிப்காட், இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் பற்றி எரிந்த தீயால் செடி, கொடி, மரங்களும் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.