சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசிய சம்பவம், மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி பவானி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது)மீது சக மாணவர் முத்தமிழன் ஆசிட் வீசினார். இதை பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் முத்தமிழனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாணவர் முத்தமிழன் மற்றும் ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த மாணவி இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆசிட் வீச்சு சம்பவத்தால் சிதம்பரம் பல்கலைக்கழத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.