Skip to main content

மான் தோலில் அமர்ந்து அருள்வாக்கு; கோயில் நிர்வாகிகளுக்கு 1.20 லட்சம் ரூபாய் அபராதம்!

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Sit on the deerskin and bless; 1.20 lakh rupees fined for temple administrators!

 

சேலம் அருகே, மான் தோல் மீது அமர்ந்து அருள்வாக்கு கூறி வந்த கோயில் நிர்வாகிகள் நான்கு பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேஷ் அனந்தசாமி (45). இவருடைய நண்பர்கள் சேலம் மிட்டாபுதூரைச் சேர்ந்த முத்துராமன் (54), பண்ணப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (36) உள்பட 5 பேர் ஒன்றாக சேர்ந்து தீவட்டிப்பட்டி தேர்முட்டி காட்டு வலவு பகுதியில் கோயில் கட்டியுள்ளனர். 

 

இந்த கோயிலில் வழக்கமான பூஜை மட்டுமின்றி குறி சொல்லுதல், தோஷம் நிவர்த்திக்காக பரிகாரம் செய்தல் உள்ளிட்ட சேவைகளையும் செய்து வந்துள்ளனர். குறி சொல்லும்போது மான் தோல் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்துள்ளனர்.

 

இதற்கிடையே, நண்பர்களுக்குள் திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் இந்தக் குழுவில் இருந்து வெளியேறிவிட்டார். இந்நிலையில், தீவட்டிப்பட்டி தேர்முட்டி காட்டுவலவு கோயிலில் மான் தோல் மீது அமர்ந்து அருள்வாக்கு கூறுவதாக மாவட்ட வன அலுவலருக்கு கிராம மக்கள் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தது. 

 

அதன்பேரில் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜூ தலைமையில் வனத்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சென்று ஆய்வு செய்தபோது, அங்கிருந்து மான் தோலை கைப்பற்றினர். சட்ட விரோதமாக மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக கோயில் நிர்வாகிகளான கணேஷ் அனந்தசாமி, முத்துராமன், சரவணன், மற்றொரு சரவணன் ஆகிய நான்கு பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

 

விசாரணையில், அவர்கள் வடமாநிலத்தில் இருந்து மான் தோலை வாங்கி வந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து சட்ட விரோதமாக மான் தோலை பயன்படுத்திய குற்றத்திற்காக அவர்கள் நான்கு பேருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.