Skip to main content

ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் ஐ.ஏ.எஸ்; மகிழ்ச்சியில் கிராம மக்கள் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Sisters from the same family succeed in civil service exam

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முந்திரி விவசாயம் செய்து வரும் ராமநாதன். இவரது மனைவி இளவரசி கடலூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரியில் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

 

இதனிடையே இவரது மூத்த சகோதரி சுஷ்மிதா(26) தங்கையைப் போல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற படித்து வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த சிவில் சரிவீஸ் தேர்வில் இந்திய அளவில் 528வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கைகளான சகோதரிகள் இருவரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். சகோதரிகள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒன்றாகவே சிவில் சர்வீஸ் எழுதி வந்துள்ளனர். இதில் தங்கை முதலில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டார். தற்போது மூத்த சகோதரி கடுமையாக முயற்சி செய்து ஆறாவது முறையாக தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி அடைந்துள்ளார்.

 

“கல்வியில் விடா முயற்சி; கடின உழைப்பு; சாதிக்க வேண்டும் என்ற வெறித்தனமான எண்ணம்; படிப்பில் மிக கவனம்; தன்னம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடித்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று விட முடியும். அதே நேரத்தில் குடும்பத்தினர் ஒத்துழைப்பும் மிக முக்கியம். அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைய வேண்டுமானால் கல்வித்துறையில் சாதிக்க வேண்டும். அதில் வெற்றி பெறுகிறவர்கள் எந்தத் துறையில் பணிக்குச் சென்றாலும் அந்தத் துறையை வளர்ச்சிக்கு கொண்டு வர முடியும்” என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் சுஷ்மிதா. மேலும், தனக்கு அரசு அளிக்கும் பணியை மக்களுக்கான முழு நேரப் பணியாக, சேவை மனப்பான்மையோடு செய்து முடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister M.K. Stalin's Pride

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 347 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர் (OBC) பிரிவில் 303 மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ். 115 மாணவர்களும், எஸ்.சி. 165, எஸ்.டி. 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் இரண்டாமிடமும் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுவையில், “மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

Chief Minister M.K. Stalin's Pride

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.