Advertisment

‘அக்கா, வெளிய யாரும் வந்துடாதீங்க’ - நொடிப்பொழுதில் பயம் காட்டிய யானை

nn

Advertisment

கோவையில் காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் 'வெளியே யாரும் வராதீர்கள்' என அலறியடித்துக் கொண்டு கத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையில் நேற்று நள்ளிரவு தடாகம் சாலை பகுதியை ஒட்டியுள்ள கனுவாய் அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. ஒரு வீட்டின் முன் பகுதியில் புகுந்த யானை அங்கிருந்த சில உணவுப் பொருட்களை எடுக்க முயன்றது. மிகவும் குறுகலான அந்த இடத்தில் யானையால் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

யானை ஒன்று வீட்டின் வெளியே நிற்பதை அறிந்து கொண்ட வீட்டுக்குள் இருந்தவர்கள் 'அக்கா, வீட்டை விட்டு வெளியே வராதீங்க; யானை வெளியே நிற்குது' எனக் கத்திக் கூச்சலிட்டனர். மாடிப்பகுதியில் இருந்தவர்கள் யானையை வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து சில நிமிடங்களை அடுத்து யானையானது அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.

kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe