Skip to main content

நெசவைத் தொலைத்துவிட்டு நாடு நிர்வாணமாகப்போகிறதா? காரப்பன் கேள்வி...

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையைச் சேர்ந்தவர் காரப்பன். தேசிய கைத்தறி பயிற்சியாளர். காரப்பன் சில்க்ஸ் உரிமையாளரான இவர், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி கோவையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். 
 

அப்போது அவர், பேசப்படாத மிகப்பிரம்மாண்டமான ஒரு துறை இந்த நாட்டில் இருக்கிறது. அது கைத்தறி நெசவுத் தொழில். எல்லோரும் நெசவுத் தொழில் என்றால் பாவம், பரிதாபம், ஏழை நெசவுத் தொழிலாளி என்பார்கள். நான் அப்படி அல்ல. என்னைப்போன்ற விஞ்ஞானி, பல்கலைக்கழகத்திற்கே அதிபராகும் தகுதி இந்த நாட்டில் உள்ள நெசுவுத் தொழிலாளர்களுக்கு இருக்கிறது. இன்றுவரை எந்த ஒரு நெசவாளியையும் எந்த பல்கலைக்கழகம் அடையாளப்படுத்தவில்லை. 

 

Sirumugai


 

நான் நெய்யும் இடம் தூசி. விற்கும் இடம் ஏசி. நெய்கிறவன் ஏழை, வாங்குகிறவன் பணக்காரன். இந்த நாட்டில் மிகப்பிரம்மாண்டமான ஒரு துறை இருக்கிறது என்றால் அது நெசுவுத் தொழில். சமீபத்தில் நம்ம கல்வித்துறை அமைச்சரிடம் பேசும்போது, கைத்தறிக்கு ஒரு பாடத்திட்டடம் கொண்டுவரலாம் என்று கேட்டேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றார், நான் பட்டுச்சேலை நெய்கிறேன் என்றேன். ஏன் வேட்டி நெய்ய வேண்டியதுதானே என்றார். 
 

நான் வேட்டி நெய்திருந்தாலும் பணக்காரன் ஆகியிருப்பேன். பட்டு நெய்தால் அதைவிட பணக்காரனாகியிருப்பேன். ஏனென்றால் என்னுடைய தொழில் பிளாட்பாரத்தில் கிடையாது. இன்றைக்கு கார், பைக் எல்லாமே பிளாட்பாரத்திற்கு வந்துவிட்டது. ஆனால் என்னுடைய கைத்தறி பிளாட்பாரத்தில் இருந்து ஏசிக்கு போய்விட்டது. 
 

நான் நிறைய ஊடகங்களில் பேசியிருக்கேன். ஏனோ தெரியவில்லை. இந்த நெசவைத் தொலைத்துவிட்டு நாடு நிர்வாணமாகப்போகிறதா? படித்த வேலைக்கு பலபேர் ஓட்டம், பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம். அப்பன் வேலையை அவனது பிள்ளை சொப்பணத்திலும் நினைப்பதில்லை. இன்றைக்கு படித்தவர்களுக்கு வேலை இருக்கிறதா? எங்களுக்கு ஆளே இல்லை.
 

எட்டு லட்சம் அட்வாண்ஸ் கொடுக்கிறார்கள் நெசவாளிக்கு. விசைத்தறி தொழிலாளிக்கு இரண்டு லட்சம் அட்வாண்ஸ் கொடுக்கிறார்கள். இந்த நாட்டில் எந்த வேலைக்கு அட்வாண்ஸ் கிடைக்கிறது. வீடு தேடி சம்பளம் வரும் ஒரே துறை நெசவுத் துறை. அதைப்பற்றி பேசுவதற்கு ஒரு அரசியல்வாதி இல்லை. நெசவாளிகளை யாரும் அடையாளம் காட்டவில்லை.
 

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கு 48 நாளும் 7 அடியில் தினமும் ஒரு புடவை. காலில் செருப்பு அணியாமல், ஒழுங்காக சாப்பிடாமல், பொண்டாட்டிக்கூட பேசாமல், பக்தியோடு நெசவு செய்வான் நெசவாளி. அந்த சேலையை பக்தியோட அத்திவரதருக்கு கொடுப்பான். அத்திவரதர் அதனை கட்டிக்கொண்டு நிற்பார். ஆனால் அந்த நெசவாளியை இன்றுவரை அடையாளம் காட்டவில்லை. எங்களுடைய வேலைவாய்ப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக என்ன வழி இருக்கிறது. ராக்கெட் விடும் விஞ்ஞானியை உருவாக்க முடியும். நெசவாளியை உருவாக்க முடியாது. ஏனென்றால் அது தாய்வழியாக வந்த தொழில். அதை அநாவசியமாக தொலைத்துவிட்டோம். இனி யாரை வைத்து அதனை விரிவுப்படுத்தப்போகிறோம். மிகப்பெரிய கேள்விக்குறி. இந்த கைத்தறித் தொழிலைப் பற்றி யாரும் எந்த மேடையில் பேசுவதுகிடையாது என்றார். 
 

பேச்சினிடையே, ''இந்து கடவுள் கிருஷ்ணரை, அத்திவரதரை இழிவாக பேசியதாக சிறுமுகை காரப்பனை கைது செய்ய வேண்டும்'' என  கோவை மாநகர போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இந்து அமைப்புகள் போராட்டமும் நடத்தியது. 

இந்த நிலையில் காரப்பன் மகன் தண்டபாணி, 'எனது தந்தை காரப்பன் அவர்கள் எனது இந்து மக்கள் மனதை புன்படுத்தும் விதமாக கடவுளை பேசியது ரொம்பவும் கடுமையானது என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு உங்கள் போராட்டம் வரவேற்க தக்கது தான். எனது ஆதரவும் உண்டு. 27 வருடங்கள் காரப்பன் சில்க்ஸ் நடத்தி வருவது நான் தான் என்று நீங்கள் அனைவரும் அறிந்ததே. நான் இந்து மதம் சார்ந்தும் தெய்வ பக்தியுடனும் தான் இருக்கிறேன் இந்து மதத்தின் எதிரானவன் அல்ல என்பதும் உங்களுக்கு தெரியும். 500க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்தை சார்ந்து வாழ்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். காரப்பன் அவர்கள் பேசியது மிகப்பெரிய தவறு ஏற்று கொள்கிறேன் என கூறியுள்ளார். 
 

காரப்பன் வீடியோ வாட்ஸ் அப்பில், எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். ஒரு கூட்டத்தில் நெசவுத் தொழில் பற்றி பேசும்போது, இந்து மக்களின் நம்பிக்கை உள்ள கடவுளை பற்றி பேசும்படி ஒரு வார்த்தை வந்துவிட்டது. அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஏன் இதுவரைக்கும் யாரும் கைத்தறிப் பற்றி பேசவில்லை என்றால் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் நானும் இதைப்பற்றி பேசப்போவதில்லை. அது எனக்கு தேவையும் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். இனி இந்த வார்த்தை என்னுடைய வாயில் இருந்து வராது என்று கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.

 

 

Next Story

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி; பரிசுகளை வழங்கிய முதல்வர் 

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தைக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகத் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்காகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தியது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகிய பரிசுகளும், மாநில அளவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.1,00,000, ரூ,50,000 மற்றும் ரூ.25,000 ஆகிய பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 228 மாணவ, மாணவியர்களும், மாநில அளவில் 6 மாணவ, மாணவியர்களும் இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றனர்.

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்குப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, மா. சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர்  திண்டுக்கல் லியோனி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.