Skip to main content

மூன்று மாதங்களுக்கு பிறகு கடலுக்கு செல்லும் மீனவர்கள்; பதற்றம் நீடிப்பதால் போலீஸார் குவிப்பு...

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

பதிவு பெறாமல் அதிவேக இன்ஜின்களை கொண்ட படகுகளுக்கு தடைவிதிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பழையார் துறைமுகம் மீனவர்கள் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.

 

sirkazhi fishermen issue

 

 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இயற்கை சூழலுடன் அமைந்துள்ள துறைமுகம் பழையார் துறைமுகம். விசைப்படகுகள், பைபர் படகுகள், நாட்டுப்படகுகள், என நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க இத்துறைமுகத்தையே பயன்படுத்தி வந்தனர். இதில் 234 பெரிய, சிறிய விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு மீீனவர்கள் பயன்படுத்துகின்றனர். இவற்றில் 47 விசைப்படகுகள் அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்டவை என்பதால் மீன்வளத் துறையில் பதிவு செய்யப்படவில்லை. மீதமுள்ள 187 விசைப்படகுகளில் பதிவுக்கு பிறகு 36 படகுகள் 240 குதிரை திறனுக்கு அதிகமான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது என மீன்வளத்துறையினரால் கண்டறியப்பட்டு 151  விசைபடகுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டதாக மீன்வளத் துறையில் தெரிவித்தனர்.

இதற்கிடையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கோ, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கவோ மீன்வளத் துறையில் அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் தடையை மீறி படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் தடை செய்யப்பட்ட படகின் உரிமையாளர்கள் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த 240 குதிரை திறனுக்கு குறைவான விசைப்படகளை கொண்ட மீனவர்கள் தங்களின் மீன்பிடி தொழில் பாதிப்படைவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துவந்தனர், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து அதிக திறனுள்ள என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை தடை செய்யக்கோரி பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளத் துறையினர் இரு தரப்புகளிடையே பலமுறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வேலைநிறுத்தத்தை தொடங்கி நடத்தி வந்தனர்.

கடந்த அக்டோபரில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அரசு பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தனர். அதனை தொடர்ந்து அதிவேக சீன எஞ்சின் விசைப்படகு சங்கத்தினரும் வழக்கு தொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றம் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்கு சட்டத்தின்படி அரசு அங்கீகாரம் பெறாத விசைப்படகுகள் கடலுக்கு செல்லக் கூடாது என கூறியது. இதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல ஆயத்தமாகினர். அதன்படி மீன்வளத்துறை 130 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல மீண்டும் பதிவு செய்துகொண்டனர். விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதே நேரத்தில் தடைசெய்யப்பட்ட அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகு ஓன்றும் கடலுக்குள் சென்றதால் மீண்டும் பதற்றமானது.

இதுகுறித்து தகவல் அறிந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேல் போலீசாருடன் மற்றொரு படகில் துரத்தி சென்று தடை செய்யப்பட்ட படகை பிடித்துவந்து 37 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மீண்டும் பிரச்சனை வரும் என்பதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.