Skip to main content

அமைச்சர் ஒ.எஸ். மணியணின் நண்பர் வெட்டிக்கொலை: சீர்காழியில் பரபரப்பு

Published on 23/07/2018 | Edited on 24/07/2018


 

Sirkazhi


அமைச்சர் ஒ.எஸ். மணியணின் வலதுகரமாகவும், எஸ்.பி.வேலுமணியின் இடதுகரமாகவும் இருந்துவந்த எடமணல் பாபு என்கிற மணல் பாபுவை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பாகியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள கிராமமான எடமணலை சேர்ந்தவன் ரமேஷ்பாபு. சாதாரன தினக்கூலியாகவும், ஒருவேலை உணவிற்கே வழியற்றநிலையும் இருந்த ரமேஷ்பாபுவிற்கு தற்போது பல கோடிகளுக்கு மேல் சொத்து வந்ததற்கு காரணம் மணல் கடத்தலும், இரால் குட்டைகளும், காண்ட்ராக்ட் வேலைகளும் தான்.
 

இதுகுறித்து காவல்துறை வாட்டாரத்தில் விசாரித்தோம். சாதாரன மகேந்திரா வேன் டிரைவராக காலத்தை துவங்கியவர், பிறகு அதிமுகவின் சீர்காழி எம்.எல்.ஏ. சந்திரமோகணுக்கு பர்சனல் உதவியாளர் ஆனார். அதன் மூலம் கிடைத்த தொடர்புகளைக் கொண்டு மணல் கடத்தல் ஒப்பந்த பணிகளை செய்வது என பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார். 

 

 


அதன் பிறகு சிட்டிங் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணிக்கும், ஒ.எஸ்.மணியனுக்கும், எம்.எல்.ஏ. பாரதிக்கும் சகலமுமாக மாறினார். மணல் பாபு என்று சொன்னால் அமைச்சர் சொன்னதுபோல் என்கிற அளவிற்கு வளர்ந்தார். (அரசு அதிகாரிகள் முதல், அரசியல் பிரமுகர்கள் வரை அவருக்குசல்யூட் அடிக்காதவர்கள் இல்லை என்பதை நமது நக்கீரனில் மூன்று முறை செய்தியாகியுள்ளோம்).
 

 

இந்த முறை ஒ.எஸ்.மணியன் வேதாரன்யம் தொகுதியில் போட்டியிட்டபோது தனது சாகக்களை கொண்டு டூவிலர் சீட்டிலும், பெட்ரோல் டேங்கில் பாலீத்தின் பையிலும் பணம் கொண்டு சென்று தொகுதியில் வாக்குகளுக்கு பட்டுவாடா செய்தார். அதன் மூலம் அமைச்சர் மணியனுக்கு மேலும் விசுவாசமானார்.

 

 

 


இன்றைய நிலவரப்படி சுமார் 120க்கும் அதிகமான லாரிகள், 10க்கும் அதிகமான கலவைமெசின், 10க்கும் அதிகமான ஜே.சி.பி. கிட்டாஜ், சென்னை முதல் நாகப்பட்டினம் வரை சொத்துக்களையும் வாங்கி குவித்து வைத்திருக்கிறார். 

அதோடு அமைச்சர்கள் இருவரின் சொத்துக்களுக்கும் பினாமியாகவும் இருந்து வருகிறார். அதிமுக ஆட்சி வந்ததும், தனக்கு சாதகமான அதிகாரிகளை சீர்காழிக்கு கொண்டுவந்து மணல் கடத்தல், இரால் குட்டை, சேம்பர் கால்வாய் என பல தொழில்களை கன கச்சிதாமக செய்து வந்தார். அதற்கு அதிமுகவில் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் கூடிக்கொண்டே இருந்தது. இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு எதிரானவர்களை அச்சுருத்தும் வகையில் ''என்னிடம் இரண்டு துப்பாக்கிகள் உள்ளது. போட்டு விடுவேன்'' என அடிக்கடி எதிர்ப்பவர்களை அச்சுருத்தியபடியே இருந்து வந்தார். 
 

 

 

இந்த நிலையில் இன்று காலை தொழில் நிமித்தமாக சீர்காழி கடை வீதியில் உள்ள ஜாகிர் உசேன் பஸ் அதிபரை பார்க்க சென்றார். அப்போது நாட்டு வெடிகுண்டை வீசி, அரிவாளால் வெட்டியுள்ளனர். மணல் பாபு கொலைசெய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

கரை ஒதுங்கிய மர்மப் பொருள்; பதற்றத்தில் மீனவ கிராமம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Mysterious object washed ashore in Sirkazhi; A fishing village in tension

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் 'அபாயம் தொட வேண்டாம்' என  ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றுள்ளனர் போலீசார். இது அந்த மீனவ கிராமப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.