Skip to main content

மருத்துவர்களின் அலட்சியம், செவிலியர்களின் ராஜ்ஜியம்; தொடரும் அவலம்...

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு செவிலியர் ஒருவர் செலுத்திய ஊசி முறிந்து உள்ளே சென்றது. ஊசியை அகற்றி சிகிச்சை பெற போதிய வசதி இல்லாததால் இரண்டு வாரங்களாக வேதனையடைந்தவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

 

sirkali woman affected by broken needle in hospital

 

 

நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் பார்வதி,  கணவரை இழந்துள்ள அவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் 9ம் தேதி பார்வதிக்கு காய்ச்சல் அடிக்க அருகில் உள்ள சீர்காழி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவரோ செவிலியரிடம் கூறி பார்வதிக்கு இடுப்பு பகுதியில் ஊசி போடசொல்லியிருக்கிறார். ஊசிபோட்ட செவிலியர் ஊசியை எடுக்க முயன்றபோது வெளியே வராமல் உள்ளேயே முறிந்துவிட்டதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.  

பிறகு அந்த தவறில் இருந்து தப்பித்துக்கொள்ள அங்கிருந்த மருத்துவர் சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு பார்வதியை அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்து விட்டு ஊசி எதுவும் இல்லை என கூறி அனுப்பிவிட்டனர். வலியோடு வீட்டுக்கு வந்த பார்வதிக்கு நாள் ஆக ஆக ஊசி போட்ட இடத்தில் வலி கடுமையாகி துடித்துள்ளார். 

இந்தநிலையில் மூன்றுநாள் கழித்து பார்வதியின் வீட்டைதேடி அவசர அவசரமாக ஓடிவந்த அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர், உங்க எக்ஸ்ரேவை  முழுமையாக ஆய்வு செய்தபோது ஊசி உள்ளே இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு நீங்க வரவேண்டும் என அழைத்துள்ளனர். வலியோடு அரசு மருத்துவமனைக்கு சென்ற பார்வதிக்கு மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் ஊசி ரொம்ப ஆழத்துக்குச் சென்றுவிட்டது,  அதனை இங்கு அகற்ற முடியாது என கூறி சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போகசொல்லியிருக்கின்றனர். அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பார்வதியம்மாளுக்கு வருமானம் இல்லை என வீட்டிலேயே முடங்கிவிட்டார், 

இந்த செய்தி, ஊடகங்கள் வழியாக வெளியுலகத்திற்கு பரவ, பிறகு சிதம்பரம் அழைத்துச்செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்து ஊசியை எடுத்துள்ளனர். மருத்துவர்களின் அலட்சியம், செவிலியர்களின் அஜாக்கிரதையால் இதுபோன்ற விபரீதம் நடந்தபடிதான் இருக்கிறது.

இதற்கு முன்பு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பெண் ஒருவருக்கு தலையில் சாக்கை தைப்பைதுபோல தைத்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

கரை ஒதுங்கிய மர்மப் பொருள்; பதற்றத்தில் மீனவ கிராமம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Mysterious object washed ashore in Sirkazhi; A fishing village in tension

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் 'அபாயம் தொட வேண்டாம்' என  ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றுள்ளனர் போலீசார். இது அந்த மீனவ கிராமப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.