Skip to main content

சிப்காட் குண்டாஸ் ரத்து விவகாரம்; நிபந்தனை விதித்த நீதிமன்றம்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Sipkot Guntas cancellation issue; The court stipulated

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில் 125 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களில் பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்யப்பட்டனர். இதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 6 பேரின் குடும்பத்தினரும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதில் அவர்கள், வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் இத்தகைய தவறை செய்யமாட்டோம் என்றும் கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அவர்கள் வைத்த அந்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 20 பேர் ஜாமீன் வழங்க கோரி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த நிலையில், இது தொடர்பான விசாரணை இன்று (20-11-23) திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 20 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதில், அருள் என்பவர் மட்டும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலும், மற்ற 19 பேரும் வேலூர் நீதிமன்றத்திலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஏற்றப்பட்டது 'மகாதீபம்'- பக்தியில் ஆர்ப்பரித்த திருவண்ணாமலை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Loaded 'Mahadeepam' - Tiruvannamalai chanted with devotion

 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்புள்ள மண்டபத்தில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகக் கோயிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் தற்போது  ஏற்றப்பட்டுள்ளது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தீபத்தை தரிசித்தனர். இந்த மகா தீபம் 11 நாட்களுக்குத் தொடர்ந்து எரிவதற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும், 1500 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

தீபத் திருவிழாவைக் காண்பதற்காக 35 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் சுமார் 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு உதவுதற்காக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள 044-28447703, 044-28447701, 8939686742 என்ற தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் காணாமல் போனால் அது குறித்து தகவல் தெரிவிக்க 9342116232 - 8438208003 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

அய்யங்குளத்தை திறந்து வைத்த அமைச்சர்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

nn

 

பக்தி நகரான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றிலும், கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான குளங்கள் இருந்தன. இந்த குளங்களில் அதிகமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி கட்டடங்களாகி விட்டன. இப்போது வெகு சில குளங்களே உள்ளன. அதனை பாதுகாக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

திருவண்ணாமலை நகரில் உள்ள சில குளங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முடிவில் தெப்பம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அய்யங்குளமும் ஒன்று. இந்த குளத்தின் கரைகள், 32 படிக்கட்டுகளில் 10க்கும் மேற்பட்ட படிகள் உடைந்து, சிதிலமடைந்து பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இக்குளத்தில் அதிகளவு சேறு சேர்ந்து புதைகுழியாக மாறின. சில ஆண்டுகளுக்கு முன்பு மஹாளய அமாவாசையின் போது தர்ப்பணம் கொடுக்க பூஜை செய்ய சிவாச்சாரியார்கள், ஐயர்கள் குளத்தில் இறங்கிய போது ஐந்துக்கும் மேற்பட்டோர் மூழ்கி இறந்தனர்.

 

அப்போது முதல் அக்குளத்தை செப்பனிட்டு சீர் செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலுவிடம் அய்யர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணியை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

 

அதன்படி 3 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளமும், 360 அடி அகலமும் 32 அடி ஆழமும் கொண்ட குளத்தினை தூர்வாரி, சீரமைத்து, புனரமைக்கும் பணியினை அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் வேலு நடத்தும் தூய்மை அருணை இயக்கத்தின் சார்பில் செய்தார்.

 

nn

 

அந்த பணியினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது அந்த குளம், நகரத்தில் வாரந்தோறும் தூய்மை பணியில் ஈடுபடும் ஐநூறுக்கும் அதிகமான தூய்மை அருணை இயக்கத்தினர் வருகை தந்திருந்தனர். குளத்தின் மையத்தில் 4 கால் மண்டபம் உள்ளது. சிதிலமடைந்த அந்த மண்டபத்தினை சீர் செய்து அதில் நந்திசிலை அமைத்து தரவேண்டும் என அய்யர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அங்கே நந்தி சிலை வைக்கப்படும் என அறிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு. அதன்படி நந்தி சிலையும் வைக்கப்பட்டது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இறுதி நிகழ்வாக தெப்பம் விடும் உற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐயங்குளத்தில் கப்பல் உற்சவம் நடத்த வேண்டும் என்பதற்காக வேக வேகமாக பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் 25 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட ஐயங்குளத்தினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்