சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நினைவு நாள் அனுசரிப்பு (படங்கள்)

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 77வது நினைவு நாளை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மன்றத்தின் தி.மு.க துணைத்தலைவர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர். மேலும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள சிங்கார வேலர்சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் வீரபாண்டி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

cpi jeyakumar Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe