எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு!

singer sp balasubramanyam chennai

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

singer sp balasubramanyam chennai

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், பாடகர் மனோ நேரில் இறுதியஞ்சலி செலுத்தினர். அப்போது, எஸ்.பி.பி. உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார் பாடகர் மனோ.அதேபோல் எஸ்.பி.பி. உடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் இறுதியஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் இறுதிச்சடங்குகளைச் செய்து வருகிறார். இறுதிச்சடங்கு நடைமுறைக்கு பின்னர் காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யபபடவுள்ளது.

s.p.balasubramaniam
இதையும் படியுங்கள்
Subscribe